நத்தம் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் பிணம்

வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார்.போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் பிணமாக மிதந்த ராமன்.
கிணற்றில் பிணமாக மிதந்த ராமன்.
Published on

நத்தம்:

நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்ட மலை பட்டியை சேர்ந்த வர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லை க்கட்டி வைத்திருந்த தால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லை க்கட்டி கிண ற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com