search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவு நீர் குட்டையில் வாலிபர் பிணம்
    X

    கழிவு நீர் குட்டையில் வாலிபர் பிணம்

    • போலீசார் விசாரணை
    • யார்? என்று அடையாளம் தெரியவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்புறம் இருந்த கழிவு நீர் குட்டையில் ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் குட்டையில் இறந்து கடந்த பிணத்தை வெளியே எடுத்து பார்த்தபோது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவருக்கு சுமார் 37 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.

    பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது உடைய வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத இரண்டாவதாக ஒரு வாலிபர் அதே குட்டையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் இறந்த நபர் முன்விரோதம் காரணத்தால் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இங்கு போட்டு விட்டு சென்று உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் மர்மமான முறையில் இறந்த கிடப்பது சந்தேகத்தி ற்குரியதாக உள்ளது. இதனை போலீசார் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வந்து இரவு நேரங்களில் லாரியில் வந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தங்கி விடுகின்றனர். இப்பகுதியில் பலமுறை கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து தற்போது மர்மமான முறையில் வாலிபர்கள் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×