search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலில் மிதந்த வாலிபர் பிணம்
    X

    வாய்க்காலில் மிதந்த வாலிபர் பிணம்

    • வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்
    • திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலம் வடுகனூர் தொட்டியன் குட்டை வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட னர்,

    விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமலையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் திருமலை (வயது 29) வாய்க்காலில் பிணமாக மிதந்தது தெரியவந்தது, இவர் எழுமாத்தூர் அருகே அய்ய கவுண்டம்பா ளையத்திற்கு வந்து தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு திரு மலையை காணவில்லை. இதையடுத்து திருமலையின் தந்தை லட்சுமணன் அவரை தேடி வந்தார் அப்போது திருமலை அய்யகவுண்டம் பாளையம் வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்ததாகவும் அப்போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது.

    இத குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×