அழுகிய நிலையில் ஆண் பிணம்

ஏற்காடு மலையில் பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது.
அழுகியநிலையில் உள்ள மனித மண்டை ஓடு.
அழுகியநிலையில் உள்ள மனித மண்டை ஓடு.
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது செங்காடு கிராமம். இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்றும், 30 வயது மதிக்கதக்க இளைஞராக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

எலும்பு கூடாக கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து கிடந்தது யார்? அவர் தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com