search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drain"

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    • மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.

    இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தொண்டியில் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் சாக்கடையாக மாறிவருகிறது.
    • சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி-மதுரை சாலையும் சந்திக்கும் இடத்தில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

    சில மாதங்களில் பெய்த மழையால் இந்த குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. அதில் கரையே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை படர்ந்து குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் குளம் கழிவுநீர் சாக்கடையாக மாறிவருகிறது. அந்த பகுதியை கடந்தால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும், இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    ஆகாய தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி முன்பு போல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    அதற்கு முன்னதாக குளத்தை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு நோய் தொற்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
    • சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் மத்தியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் கிராமத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இக்குளத்தில் வடிந்து நிரம்பும். மேலும் கருப்பூர் மெயின்ரோட்டில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் அந்தளி பாசன வாய்க்காலிலிருந்து வரும் நீரும் இக்குளத்தில் வடிந்து நிரம்பி குளத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பாசன வாய்க்காலில் வடிந்து கிராமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கச் செய்கிறது.

    2 மீட்டருக்கு மேல் அகலமான இந்த குளத்து நீர் வடிகால் வாய்க்கால் சுமார் 1 மீட்டருக்கு மேல் வாய்க்காலின் இருபுறமும் உள்ள வயல்களோடு சேர்த்து வரப்புகள் அமைக்ப்பட்டுள்ளதால் வாய்க்கால் 2 அடி அகலமுடையதாக குறுகிவி ட்டது. இதனால் அந்தளி வாய்க்காலிருந்து வரும் தண்ணீரும் மழைக்காலத்தில் கிராமத்தில் பெய்யும் மழை நீரும் ஒரே நேரத்தில் வடியும் போது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, குழிமாத்தூர் கிராம பஞ்சாயத்துக் குளத்திலிருந்து செல்லும் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அகலப்படுத்தி, மழைக்காலங்களில் குளத்திலிருந்து வடியும் நீர் முழுமையாக வடிந்து செல்லுமாறு தூர்வாரியும் புதுப்பித்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலு, ஒன்றிய நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் புதர்மண்டிய கோரைப் புற்களுடன் வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்து வந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.

    இதனால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோரைப்புற்களுடன் கலெக்டரிடம் மனு கொடுத்த வந்த விவசாயிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை தினமும் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் தினமும் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

    இங்கு வருகை தரும் வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ‘பார்க்கிங்’ இடத்தில் சரிவர பராமரிப்பு பணி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் பூ மார்க் கெட்டில் உள்ள கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 சிறிய, பெரிய பூக்கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவு பூக்கள் திறந்த வெளி ‘பார்க்கிங்’ இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள், மழைநீர், கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மார்க்கெட் மேலாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குளங்களுக்கு காவிரி நீர் செல்லும் நீர்வழிப் பாதையான பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராமமக்கள் தண்ணீரின்றி அவதியுற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

    கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×