search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fight"

    • கட்சிகாரங்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    தலைநகர் டெல்லியின் சகார்பூர் [Shakarpur] பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களுக்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.

    இது கைகலப்பாக மாறவே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில், இந்த விவகாரம் வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் [ முன்னதாக சிஆர்பிசி 107/150] கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று உறுதியளித்துள்ளார்.

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
    • இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
    • திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

    அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

    இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்
    • மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    விராலிமலை ஒன்றியம், பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). விவசாயி. கருப்பையாவும், அதே ஊரை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரும் மலம்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவூர் அருகே இலுப்பூர் மாத்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே விராலிமலை தாலுகா வேலப்படையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது.
    • அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவிவிஜயராணி (வயது45),இவர்களது மகள்வித்யா (24), வித்யாவை புதுவை மாநிலம் கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த 5ஆண்டு க்கு முன்திருமணம் செய்து கொடுத்தனர்.இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.இதே போலகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. வித்யா சண்டை போட்டுக் கொண்டே தாய் வீடான பூண்டி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த 28-ந் தேதி 10.30மணி அளவில் பூண்டி கிராமத்திற்கு சென்று மாமியார் வீட்டின் கதவு,வாசலை உடைத்து உள்ளே புகுந்து மாமனார் ரகுநாதன், அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்தனர்.

    • போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
    • 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.

    பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை.
    • கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.

    இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை மருமகள் உடைத்தார்.
    • உறவுக்கார பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முத்து–சாமிபுரம் காமராஜர் நக–ரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது மகன் இளங்கோ, மருமகள் மரு–மகள் பொன்னுபிரியா. திருமணத்திற்கு பிறகு தம்ப–தியினர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மாமியார், மருமகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். உறவினர் கள் சமரசம் செய்துவைத்தும் பலனில்லை. இந்த நிலை–யில் சம்பவத்தன்று செல்வி தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    மேலும் அவர் தன்னைப் பற்றி தான் செல்போனில் ஜாடையாக பேசிக்கொண்டி–ருப்பதாக மருமகள் பொன் னுபிரியா நினைத்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர் மாமியார் என்றும் பாராமல் உடைந்து கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் தலையில் பலமாக அடித்தார். இதில் செல்வி–யின் மண்டை உடைந்தது.

    மேலும் அருகில் வசிக்கும் பொன்னுபிரியாவின் தாய் சுந்தரவள்ளி, உறவினர் ஜெயபிரியா ஆகியோரும் அங்கு வந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த செல்வி ராஜபா–ளையம் அரசு ஆஸ்பத்திரி–யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி–றார்.

    • மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முருகம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21). இவருக்கும் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மங்கலம் சாலை புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

    • சங்கர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • சங்கர், சிவபெருமாள் ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் அஸ்வின் (வயது21). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அவரது நண்பரான கீழத்தெருவை சேர்ந்த சங்கர் (21) தனது நண்பர்களுடன் வந்தார். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. சங்கர், அவரது நண்பர் சிவபெருமாள் (25) ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர். இதுபோல அஸ்வின், வினிஸ் (23), ரவி (21) ஆகியோர் சேர்ந்து சங்கரின் நண்பரான பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீராமரை (21) தாக்கினர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிவபெருமாள், சங்கர், அஸ்வின், வினிஸ், ரவி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி என்பவருக்கும், சம்பத்குமாருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    கணவனை இழந்த அமிர்தவள்ளி ஒரு மகனுடன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார்.

    மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார். பின்னர் வீட்டில் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஏட்டு சம்பத்குமார் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×