search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை உடைத்த மருமகள்
    X

    செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை உடைத்த மருமகள்

    • செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை மருமகள் உடைத்தார்.
    • உறவுக்கார பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முத்து–சாமிபுரம் காமராஜர் நக–ரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது மகன் இளங்கோ, மருமகள் மரு–மகள் பொன்னுபிரியா. திருமணத்திற்கு பிறகு தம்ப–தியினர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மாமியார், மருமகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். உறவினர் கள் சமரசம் செய்துவைத்தும் பலனில்லை. இந்த நிலை–யில் சம்பவத்தன்று செல்வி தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    மேலும் அவர் தன்னைப் பற்றி தான் செல்போனில் ஜாடையாக பேசிக்கொண்டி–ருப்பதாக மருமகள் பொன் னுபிரியா நினைத்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர் மாமியார் என்றும் பாராமல் உடைந்து கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் தலையில் பலமாக அடித்தார். இதில் செல்வி–யின் மண்டை உடைந்தது.

    மேலும் அருகில் வசிக்கும் பொன்னுபிரியாவின் தாய் சுந்தரவள்ளி, உறவினர் ஜெயபிரியா ஆகியோரும் அங்கு வந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த செல்வி ராஜபா–ளையம் அரசு ஆஸ்பத்திரி–யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி–றார்.

    Next Story
    ×