search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் நண்பர்களுக்குள் மோதல்;  2 பேர் காயம்
    X

    களக்காட்டில் நண்பர்களுக்குள் மோதல்; 2 பேர் காயம்

    • சங்கர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • சங்கர், சிவபெருமாள் ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் அஸ்வின் (வயது21). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அவரது நண்பரான கீழத்தெருவை சேர்ந்த சங்கர் (21) தனது நண்பர்களுடன் வந்தார். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. சங்கர், அவரது நண்பர் சிவபெருமாள் (25) ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர். இதுபோல அஸ்வின், வினிஸ் (23), ரவி (21) ஆகியோர் சேர்ந்து சங்கரின் நண்பரான பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீராமரை (21) தாக்கினர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிவபெருமாள், சங்கர், அஸ்வின், வினிஸ், ரவி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×