search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public awadhi"

    சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மின்சாரம் இருந்தும் பல இடங்களில் வோல்டேஜ் பிரச்சினையும் இருந்ததால் நிலையான மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் டி.வி., மின்விசிறி, பிரிட்ஜ் ஆகியவை இயங்கவில்லை. இதுவும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.

    எண்ணூர் முதல் தி.நகர் வரையிலான பகுதிகளில் மின்தடை காரணமாக பொது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    எண்ணூரில் உள்ள மின் நிலையத்தில் இருந்து 400 கிலோ வாட் மற்றும் 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும். மின்சாரம் மின் கோபுரங்கள் வழியாக மின் பகிர்மான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதில் சில மின் கோபுரங்களில் உள்ள மின் கடத்திகளில் ஏற்பட்ட பிரச்சினையால் மின் தடை ஏற்பட்டது.

    மணலி, அலமாதி, வல்லூர் ஆகிய மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் 400 கிலோ வாட் மற்றும் 110 கிலோ வாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு பாதிக்கப்பட்டது. இவை சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், நள்ளிரவு ஏற்பட்ட மின்தடை பலமணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை தான் சரி செய்யப்பட்டது. இதனால் இரவில் மக்கள் தூக்கமின்றி தவித்ததாக திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கூறினர்.

    சோளிங்கநல்லூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வோல்டேஜ் பிரச்சினை இருந்தது. பள்ளிக்கரணை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் வாரியம் பகலில் மின்தடை ஏற்படுத்துவதால் கோடை வெயிலில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பானி புயல் சென்னைக்கு மிக அருகில் வந்து திசை மாறி சென்றதால் ஈரப்பதம் முழுவதையும் புயல் இழுத்துச் சென்று விட்டது.

    இதன் காரணமாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. காலை 10 மணிக்கே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் நீடிக்கிறது.

    இந்த சூழலில் பராமரிப்பு பணி என்ற பெயரில் சென்னையில் பல பகுதிகளில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    பெரும்பாலான வீடுகளில் பகலில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. பெண்கள்தான் வீட்டில் சமையல், துணி துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். மின் நிறுத்தம் காரணமாக பெண்கள் படும் வேதனை சொல்லி மாளாது.

    முகப்பேர், திருவொற்றியூர், வடபழனி உள்பட சில பகுதிகளில் இரவு நேரங்களிலும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் ஏ.சி. சரிவர இயங்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இரவில் அதிகளவில் மின் தடங்கல் ஏற்படக் கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மின் பராமரிப்பு பணி பகலில்தான் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்து விடுகிறது. மின் தடங்கல் குறித்து முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம்” என்றார்.

    திருவாடானை அருகே ஆறுமாதமாக குடி தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான திருமடிமிதியூர் தொத்தார் கோட்டை காலனி குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்கென்று ஒருவருடத்திற்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடி தண்ணீர் வரவே இல்லை.

    குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் முன்பு 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் போட்டோ எடுத்து சென்றவர்கள் அதன் பிறகு தண்ணீர் வரவே இல்லை.

    அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த கிராமத்திற்கு ஆறுமாதமாக தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

    பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்தப்பகுதி மக்களை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். எனவே உடனடியாக குடி நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி குடிநீர் விநியோகம் செய்தனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மின்மோட்டர் பழுதடைந்தது. இதனால் போர்வெல் குடிநீரை பயன்படுத்த இயலவில்லை.முறையான தகவலை சேத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும்இதுவரை யாரும் வரவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காக பல மணி நேரம் நடந்து சென்று கிணறுகளிலும்,விவசாய தோட்டங்களிலும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி,வேலைக்கு செல்லும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக பழுதான மோட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து உள்ளனர்.

    ஒட்டன்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இ-கார்னர் வசதியுடன் பணம் எடுக்க, செலுத்த எந்திரங்கள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெளியூரில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்

    மேலும் வேலைக்கு செல்பவர்கள், உதவி தொகை பெறுபவர்கள் என ஏராளமானோர் இந்த மையத்தை பயன்படுத்தி வந்தனர். வங்கியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பணம் செலுத்த ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை.

    24 மணி நேர சேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 24 மணி நேரமுமே வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பு பலகை மட்டுமே தொங்குகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் அலைந்து பணம் எடுத்து வருகின்றனர். மேலும் வேறு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில் கூறுகையில், ஏ.டி.எம். சேவை முடங்கியது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து குறைந்த பட்ச நிலுவைத் தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கான பராமரிப்பு இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மலைபோல் குவிந்த குப்பை கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை தினமும் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் தினமும் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

    இங்கு வருகை தரும் வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ‘பார்க்கிங்’ இடத்தில் சரிவர பராமரிப்பு பணி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் பூ மார்க் கெட்டில் உள்ள கழிவுகள் அங்கு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பூ மார்க்கெட்டில் மொத்தம் 470 சிறிய, பெரிய பூக்கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவு பூக்கள் திறந்த வெளி ‘பார்க்கிங்’ இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள், மழைநீர், கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மார்க்கெட் மேலாண்மை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் நாகல்நகர் வாரச்சந்தையில் டயர்களை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரில் வாரச்சந்தை உள்ளது. இங்கு திங்கட்கிழமை தோறும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் நகர் பகுதி மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை பெற்றுச் செல்கின்றனர். இதனால் சந்தை திங்கட்கிழமை தோறும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

    மேலும் காய்கறி கழிவுகளை அங்கேயே கொட்டிச் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மர்ம நபர்கள் இப்பகுதியில் டயர்களை எரித்து அதில் இருந்து கம்பிகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். டயர்களை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பி குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது.

    இதனால் வீட்டின் உள்ளே கூட பொதுமக்கள் இருமிக் கொண்டே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டயர்களை எரிப்பதனால் வெளியாகும் நச்சுப்புகை பொதுமக்களுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே அதிகாரிகள் நாகல் நகர் சந்தை பகுதியில் ஆய்வு செய்து குப்பைகள் கொட்டுவோர் மற்றும் டயர்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நிலக்கோட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் 2 லட்சத்துக்கும் மேல்மக்கள் வசித்து வருகிறார்கள். சுமார் 85 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ரேசன் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ஒருசில பேருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்க வில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் இ-சேவை மையத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

    இ-சேவை மையத்திற்கு வந்தால் கடந்த 1½ மாதங்களாக இதுபோன்ற கார்டுகள் வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்குகிறது. இந்த சமயத்தில் முதல் பட்டதாரி, பிறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு தேவைப்படுகிறது.

    தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள மக்கள் எந்த வித அரசு உதவியும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    ×