என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்துறை"

    • கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    • காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .

    திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.


    அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.

    இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    செந்துறை அருகே தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவி மாயமானதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செந்துறை:

    நத்தம் வட்டம் செந்துறை அருகே உள்ள சித்திரைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ஜெய ராமகிருஷ்ணனின் மகள் சித்ரா(16), பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    இவர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை 8-ந்தேதி மதியம் ஆங்கில தேர்வு எழுதுவதற்காக காலையில் படிப்பதற்காக சித்ராவின் தந்தை பள்ளியில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துள்ளார்.

    மதியம் நடந்த ஆங்கில பரீட்சையை மாணவி தேர்வு நடக்கும் அறைக்கு போய் எழுதவில்லை. வழக்கம் போல் தனது மகளை கூப்பிடுவதற்காக பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மகளை காணாமல் பரிதவித்தார்.

    ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர் இன்று தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறினர். பள்ளிக்கு வந்த மகள் காணவில்லை என்று நத்தம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராமகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார்.

    இதையொட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செந்துறை அருகே மரத்தில் பைக் மோதி என்ஜினீயர் பலியானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை:

    திண்டுக்கல் அருகே உள்ள செந்துறை கக்கன் காலனியை சேர்ந்தவர் முத்து பழனி. அவரது மகன் மணிகண்டன். (வயது 22). சென்னையில் என்ஜினீயராக உள்ளார்.

    இவர் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வந்து உள்ளார். இவரது பாட்டி வீடு மோர்பட்டியில் உள்ளது. எனவே பாட்டியின் நினைவு நாளை கடைபிடிப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் மோர்பட்டிக்கு சென்றார்.

    பின்னர் இரவு நேரத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். செந்துறை அருகே அய்யனார் அருவி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் புளியமரத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை இரவு நேரத்தில் யாரும் பார்க்கவில்லை. எனவே பரிதாபமாக மணிகண்டன் இறந்தார்.

    இரவு முழுவதும் மணிகண்டன வீடு திரும்பவில்லை என்று அறிந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் சாலை ஓரத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள்.


    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி குடிநீர் விநியோகம் செய்தனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மின்மோட்டர் பழுதடைந்தது. இதனால் போர்வெல் குடிநீரை பயன்படுத்த இயலவில்லை.முறையான தகவலை சேத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும்இதுவரை யாரும் வரவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காக பல மணி நேரம் நடந்து சென்று கிணறுகளிலும்,விவசாய தோட்டங்களிலும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி,வேலைக்கு செல்லும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக பழுதான மோட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து உள்ளனர்.

    செந்துறை அருகே அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆர்.எஸ். மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் கரூர்-அரியலூர் இடையே செந்துறை அருகே உள்ள சிட்டேரியில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உடையார் பாளையம் ஆர்.டி.ஓ.வுக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வெள்ளாற்றின் ஓரத்தில் மணல் கடத்த வசதியாக சாலை போடப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. உத்திரவின் பேரில் மாத்தூர் ஆர்.ஐ. செந்தில், ஆலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் அந்த சாலையை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் தூண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிட்டேரி முள்ளுகுறிச்சியை சேர்ந்த அருள் (வயது 40) என்பவர் அங்கு வந்து சாலையை துண்டிக்க கூடாது என்று கூறி தகராறு செய்தார். ஆர்.ஐ. செந்தில், கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகிய 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார். 

    இது குறித்து செந்தில் தளவாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இன்று அதிகாலையில் அருளை கைது செய்தனர். 
    செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வசந்தகுமார் வயது 19. இவர் உடையார் பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 

    இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அதிகாலையில் வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இரண்டு கஞ்சா செடிகள் இருப்பதை கண்டு பிடித்தார். 

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    ×