search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் மக்கள் அவதி
    X

    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் மக்கள் அவதி

    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி குடிநீர் விநியோகம் செய்தனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மின்மோட்டர் பழுதடைந்தது. இதனால் போர்வெல் குடிநீரை பயன்படுத்த இயலவில்லை.முறையான தகவலை சேத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும்இதுவரை யாரும் வரவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காக பல மணி நேரம் நடந்து சென்று கிணறுகளிலும்,விவசாய தோட்டங்களிலும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி,வேலைக்கு செல்லும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக பழுதான மோட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து உள்ளனர்.

    Next Story
    ×