என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன்-மனைவி கைது"

    • கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    • காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .

    திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.


    அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.

    இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

    சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மேலூர் கொட்ட நாதம்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவரிடம் கட்டக்காளைபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), அவரது மனைவி கங்காதேவி ஆகியோர் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி இருந்தனர்.

    வெகு நாட்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. எனவே சீனிவாசன் பணத்தை திருப்பிக்கேட்டபோது சரவணனும், கங்காதேவியும் மறுத்து விட்டனர்.

    இது தொடர்பாக சீனிவாசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து சரவணன், கங்காதேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    முசிறி அருகே வீரமணிப்பட்டியில் வீடுபுகுந்து பட்டபகலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 58 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முசிறி:

    முசிறி அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் பார்த்தீபன் என்பவரது வீட்டில் பட்டபகலில்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண் லதா (34) திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தீபன் பெண் ஒருவர் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    அப்போது அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்தபெண் மூலம் தப்பிஓடிய வாலிபருக்கு போன் செய்து வரவழைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் அந்த பெண்ணின் கணவர் திருச்சியை சேர்ந்த ரெங்கநாதன் (30) என்பதும், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

    மேலும் கணவன் மனைவி இருவரையும் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்ததில் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடுவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முசிறி, துறையூர், தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் லதா மூலம் நகைகளை பல்வேறு இடங்களில் அடகு மற்றும் விற்கப்பட்டிருந்த 58 பவுன் நகைகளை போலீசார் மீட்டு, இருவரையும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கணவன்,மனைவி இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×