search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife arrested"

    • மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தரிடம் பணம் பறித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள கழிவறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளம் தம்பதியினர் பேச்சு கொடுத்துள்ளனர். திடீரென்று அவர்கள் ரமேசின் சட்டை பையில் இருந்த பணத்தினை எடுத்து தப்பியோட முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல்  தெரிவித்தார். பின்னர் போலீசார் இளம்தம்பதியினரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ரமேசிடம்  ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (24), அவரது  மனைவி பொன்னி (23) என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

    சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    குடும்பம் நடத்த இடையூறாக இருந்ததாக நினைத்து பெற்ற குழந்தையை தாயே கணவருடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 26). சரக்கு வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினியும்(19) காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியுடன் திவாகரன் நெருங்கி பழகியுள்ளார்.

    இதனால் சுபாஷினி கர்ப்பம் அடையவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவாகரனை வலியுறுத்தி உள்ளார். திருமணம் செய்ய மறுக்கவே பிரச்சினை வெடித்தது.

    இது குறித்து சுபாஷினி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரனை சிறையில் அடைத்தனர்.

    கர்ப்பமாக இருந்த சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த திவாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் சுபாஷினியுடன் நெருங்கி பழகினார். தான் செய்த தவறை திருத்தி கொள்வதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடந்த 5 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இருக்கன்குடி போலீசில் நிலையத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணம் முடிந்த பின்னர் திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சுபாஷினியுடன் அடிக்கடி தகராறு செய்தார். இந்த நிலையில் நேற்று காலை குழந்தையின் கண், மூக்கில் மிளகாய் பொடி தூவப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தது.

    தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திவாகரன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர் தான் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு திவாகரனை பிடித்தனர்.

    இதை தொடர்ந்து திவாகரன், சுபாஷினி இருவரையும் போலீசில் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் சுபாஷினியே குழந்தையே கொலை செய்தது தெரியவந்தது. என் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை தனக்கு பிறக்கவில்லை. என கூறி பிரச்சினை செய்து வந்தார்.

    குடும்பம் நடத்த குழந்தை தானே பிரச்சினை என கருதி குழந்தையை கொலை செய்தேன். இதற்கு உடந்தையாக கணவரும் இருந்ததாக சுபாஷினி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் கணவன்-மனைவியை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நாகை அருகே மதுபாட்டில்களை கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திட்டச்சேரி போலீஸ் சரகம் அண்ணா மண்டபம் அருகே தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் அருண்மொழித்தேவன் மெயின்ரோட்டை சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல் (வயது 35), அவரது மனைவி சித்ரா (34) ஆகியோர் புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய வடிவேல், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பேரணாம்பட்டில் இளம்பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு ஏரிகுத்தி புதுமனை காலனியை சேர்ந்த மோகன் மகன் பாரதி (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர், அதே பகுதியில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தார். குடம் நிரம்பிய பிறகு சரியாக குழாயை மூடாமல் சென்று சென்றுள்ளார். இதனால் தண்ணீர் வீணாகியுள்ளது.

    அப்போது, அங்கு வந்த ராஜூ என்பவரின் மனைவி சுதா, குழாயை சரியாக மூடி விட்டு செல்ல முடியாதா? என்று கேட்டு பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சுதாவும், அவரது கணவர் ராஜூவும் இளம்பெண் பாரதியை தாக்கினர்.

    காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜூ (27) மற்றும் அவருடைய மனைவி சுதாவை (24) கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய ‘பலே தம்பதி’ கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
    புளியங்குடி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.

    இந்த சம்பங்களில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி, நிஷாந்த், போலீசார் ஜோஸ், விஜய், கிருஷ்ணவேணி, ராஜேந்திரன், வடிவேல் முருகன், வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். தனிப்படை போலீசார், தொடர் கைவரிசையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.

    நேற்று முன்தினம் சொக்கம்பட்டியில் உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தவரிடம் வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தனிப்படை போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கள்ளம்புளியை சேர்ந்த செல்வராஜின் மகன் ரவி கார்த்திக் என்ற கார்த்திக்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்போது புளியங்குடி டி.என்.புதுக்குடியில் வசித்து வந்ததும், ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் டி.என்.புதுக்குடியில் உள்ள கார்த்திக்குமார் வீட்டை நேற்று காலையில் சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த கார்த்திக்குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியங்கா (25) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் கார்த்திக்குமாரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான், பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றேன். கடந்த 2016-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தேன். 2017-ம் ஆண்டு முதல் பூட்டி இருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தேன். அந்த ஆண்டு தென்காசி சொர்ணபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் 10 பவுன் நகைகளையும், கே.ஆர்.காலனியில் உள்ள வீட்டில் 80 பவுன் நகைகளையும், வீரகேரளம்புதூரில் உள்ள 3 வீடுகளில் 32 பவுன் நகைகளும், ரூ.11 லட்சத்தையும் கொள்ளையடித்தேன்.



    அதே ஆண்டு ஜூன் மாதம் குற்றாலத்தில் ஒரு வீடு புகுந்து வெள்ளி பொருட்களையும், சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் தெருவிலுள்ள வீட்டில் 276 கிராம் நகைகளையும், நவம்பர் மாதத்தில் அச்சன்புதூரில் ஒரு வீட்டில் ரூ.35 ஆயிரம், நெடுவயலில் வீடு புகுந்து 17 கிராம் நகையையும் திருடி சென்றேன்.

    டிசம்பர் மாதத்தில் கடையநல்லூரில் வீடு புகுந்து 32 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் திருடினேன். கடந்த ஜனவரி மாதத்தில் வாசுதேவநல்லூரிலும், பிப்ரவரி மாதத்தில் சுரண்டை, சிவகுருநாதபுரத்திலும், மார்ச் மாதத்தில் வாசுதேவநல்லூரில் உள்ள வீடுகளிலும் நகைகள், பணத்தை கொள்ளையடித்தேன். மே மாதத்தில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ஒரு வீட்டில் 64 கிராம் நகைகள், ரூ.16 ஆயிரத்தை திருடினேன். இப்படியாக 200 பவுன் வரை நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து கார்த்திக்குமாரையும், இந்த கொள்ளை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி பிரியங்காவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த பலே தம்பதியை நேற்று போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    வீடுகளில் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தின் மூலம் கார்த்திக்குமார் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவருக்கு மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கள்ளக்காதலிகள் இருந்துள்ளனர். அவர்களுடன் கார்த்திக்குமார் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி உள்ளார். கள்ளக்காதலிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.60 ஆயிரம் கொடுத்து வந்துள்ளதாகவும், அவர்களை சந்திக்க செல்லும் போது ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாகவும், அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறினார்.

    பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை அடையாளம் பார்த்து வரும் கார்த்திக்குமார், இரவில் மனைவியுடன் அந்த பகுதிக்கு செல்வார். மறைவான இடத்தில் மனைவி நிற்க வைத்து விட்டு, பூட்டியிருக்கும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நகைகளை மனைவியை அணியச் செய்து கொண்டு திரும்புவாராம். கூடுதல் நகைகள் சிக்கும் பட்சத்தில் அதை பிரியங்கா உடலில் மறைத்து வைத்து கொள்வாராம். தம்பதியராக மோட்டார் சைக்கிளில் வருவதால் ஆங்காங்கே சோதனைக்கு நிற்கும் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்த மாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் சாதுர்யமாக போலீசாரை ஏமாற்றி விட்டு கொள்ளையடிக்கும் நகைகள், பணத்துடன் நள்ளிரவில் வீட்டுக்கு பத்திரமாக திரும்பி வந்துள்ளனர்.

    கார்த்திக்குமார் தனது சொந்த ஊரான கள்ளம்புளியில் இருந்து கொண்டு புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய பங்களாவை கட்டி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் மனைவியுடன் குடியேறி உள்ளார். அந்த வீட்டில் அனைத்து வசதிகளுடன் இந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். பிரியங்கா நாகரீகமாக உடை அணிந்து நடமாடி உள்ளார். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர். மேலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு கவனமாகவும் இருந்துள்ளனர். 
    ×