search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முசிறி அருகே வீடு புகுந்து திருடிய கணவன்-மனைவி கைது
    X

    முசிறி அருகே வீடு புகுந்து திருடிய கணவன்-மனைவி கைது

    முசிறி அருகே வீரமணிப்பட்டியில் வீடுபுகுந்து பட்டபகலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 58 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முசிறி:

    முசிறி அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் பார்த்தீபன் என்பவரது வீட்டில் பட்டபகலில்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண் லதா (34) திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தீபன் பெண் ஒருவர் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    அப்போது அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்தபெண் மூலம் தப்பிஓடிய வாலிபருக்கு போன் செய்து வரவழைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் அந்த பெண்ணின் கணவர் திருச்சியை சேர்ந்த ரெங்கநாதன் (30) என்பதும், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

    மேலும் கணவன் மனைவி இருவரையும் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்ததில் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடுவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முசிறி, துறையூர், தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் லதா மூலம் நகைகளை பல்வேறு இடங்களில் அடகு மற்றும் விற்கப்பட்டிருந்த 58 பவுன் நகைகளை போலீசார் மீட்டு, இருவரையும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கணவன்,மனைவி இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×