search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvadanai"

    திருவாடானை பஸ் நிலையத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    திருவாடானை புதிய பஸ் நிலையத்தில் தினமும் 70-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. திருவாடானை சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்துதான் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

    திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில்,ஓரியூர் அருளானந்தர் ஆலயம் ஆகிய புனித தலங்களுக்குச் செல்பவர்களும் திருவாடானை வந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

    தொண்டி வரும் மதுரை பஸ் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் திருச்சி பஸ்களும் திருவாடானை வந்துதான் செல்லவேண்டியுள்ளது. தற்போது இந்த பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு நடைபெறுகிறது.

    இங்கு கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்களை ஈவ் டீசிங் செய்யும் அட்டகாசங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இளைஞர்கள் சிலர் பஸ் நிறுத்தும் இடத்தில் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு ஈவ் டீசிங்கில் ஈடுபடுவதாக புகார் வருகின்றனர்.

    எனவே இங்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், நிற்க கூட வசதி இல்லாமல் இட நெருக்கடி உள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவும் இந்தப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை அருகே ஆறுமாதமாக குடி தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான திருமடிமிதியூர் தொத்தார் கோட்டை காலனி குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்கென்று ஒருவருடத்திற்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடி தண்ணீர் வரவே இல்லை.

    குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் முன்பு 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் போட்டோ எடுத்து சென்றவர்கள் அதன் பிறகு தண்ணீர் வரவே இல்லை.

    அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த கிராமத்திற்கு ஆறுமாதமாக தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

    பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்தப்பகுதி மக்களை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். எனவே உடனடியாக குடி நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை பகுதியில் நூதனமான முறையில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நூதன முறையில் டிராக்டரில் ஆற்றுமணல் திருடிவருகிறார்கள். அதற்கு திருவாடானை தாசில்தாரிடம் சவடு மண் அள்ளுவதற்கென்று ஏதாவது ஒரு சர்வே எண்ணை குறிப்பிட்டு அனுமதி பெறுகின்றனர்.

    பின்னர் அந்த அனுமதியை வைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்று பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். அப்படி அனுமதி வைத்துக் கொண்டு சவடு மண் அள்ளும்போது வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் சவடு மண்ணாக இருந்தாலும் அள்ளக் கூடாது.

    இந்தநிலையில் திருவாடானை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து சென்ற போது அடுத்தகுடி பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தார். அப்போது ஆற்று மணல் இருந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது அதற்கு சவடு மண் அள்ள அனுமதியை டிராக்டர் டிரைவரான நகரிகாத் தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (46) காண்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் திருடிய கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    டிராக்டரையும் பறிமுதல் செய்து திருவாடனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வேன்-மணல் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை அவர்கள் வேனில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர் சிறுமிகள் என 17 பேர் பயணம் செய்தனர். தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஜான் (வயது 24) வேனை ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.

    வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×