search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand truck"

    • மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மணல் லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
    • மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர்.

    இவரது மனைவி ஜெரினா பேகம் (வயது 36).

    இவர் இன்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில்

    படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அங்கு வேகத்தடை அமைக்க கோரி மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீசார், போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.  தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் இதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மா.மங்கலம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோழத்தரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒப்பந்தராரரின் பணியாட்கள் பொது மக்கள் மீது காரை ஏற்றுவது போல வந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரரின் பணியாட்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்போதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.
    • கலெக்டரின் மணல் லாரி,டிரைவர் கைது ,டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் பல்வேறு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வந்தார். அப்போது அவர் கூட்டேரிப்பட்டு அருகே வந்தபோது எதிரில் மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.

    அப்போது சுதாரித்துக் கொண்ட மாவட்ட கலெக்டரின் டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் லாரியை கைப்பற்றி போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓட்டல் மீது மணல் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் காரப்பிடாகை தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கடை பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடை செயல்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் கார்த்திகேயன் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்துக் கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.
     
    இதில் கடையில் டீ மற்றும் உணவு அருந்திக் கொண்டிருந்த 
    10-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் சிவசண்முகம் பலத்த காயமடைந்தார்.
     
    உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    இடதுபுறமாக சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள கடையில் புகுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வேன்-மணல் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை அவர்கள் வேனில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர் சிறுமிகள் என 17 பேர் பயணம் செய்தனர். தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஜான் (வயது 24) வேனை ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.

    வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×