search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four killed"

    • தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார்.
    • நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை:

    பெங்களூரை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அங்கு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் தங்கவேல் (68). ரேடியோ மெக்கானிக். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் அன்னூர் - கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்பேது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது.

    இதில் படுயாகம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் 65 வயது மதிக்க தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரத்தினபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் குட்டி கவுண்டர் வீதி - சின்னத்தம்பி வீதி சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்டு சுவரில் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Mogadishubombing #carbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    டப்க்கா என்னுமிடத்தில் வபாரி காலல் நிலையம் அருகே நடந்த இந்த தாக்குதலில் அந்த சாலை வழியாக சென்ற பல வாகனங்கள் சேதமடைந்தும், உருக்குலைந்தும் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Mogadishubombing  #carbombing
    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். #Israel
    காசா நகரம்:

    அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது.  இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடினர்.

    வரும் ஏப்ரலில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால் பதற்றமான எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.  மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. #Israel
    நாகை மாவட்டத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். #GajaCyclone #NagaiReliefCamp
    வேதாரண்யம்:

    கஜா புயலால் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.



    இதனால் கிராம மக்கள் சாலையோரங்களில் இரவு பகல் நேரங்களில் காத்திருந்து நிவாரண பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை வழிமறித்து உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரம் நின்ற 4 பெண்கள் கார் மோதி பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான்.

    இந்த விபத்து பற்றிய விபரம் வருமாறு:-

    ஏர்வாடியிலிருந்து நாகூரை நோக்கி நேற்று நள்ளிரவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேதாரண்யத்தை அடுத்த நீர்மூலை கிராமத்தில் கார் திடீரென நிலை தடுமாறி வேகமாக சென்றது.

    அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமுதா, சுமதி, ராஜகுமாரி, சரோஜா ஆகிய 4 பெண்கள் பலியானார்கள்.

    சரோஜாவின் மகன் மணிகண்டன் (வயது 15) படுகாயமடைந்தான்.

    விபத்தை நேரில் பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 4 பேரின் உடலையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனுக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #GajaCyclone #NagaiReliefCamp

    திருப்பதி அருகே கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ஏர்பேடு ராஜில கண்டிகா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு ரெட்டி (வயது 30) விவசாயி. இவரது மனைவி புஜ்ஜியம்மா (26). இவர்களுக்கு பவ்யா (6), நிதின் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தன.

    நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு 4 பேரும் வீட்டில் தூங்கினர். கியாஸ் இணைப்பு ஆப் செய்யாமல் இருந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் கியாஸ் பரவியுள்ளது.

    இதனை அறியாத சீனிவாசலு ரெட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மின்விளக்கை போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தார். அப்போது வீடு முழுவதும் பரவியிருந்த கியாஸ்சால் தீப்பற்றியது. வீடு முழுவதும் தீ பரவியது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்ட படி வெளியே வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள். அங்கு ஓடிவந்தனர். தீ எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீயின் அளவு அதிகரித்தது. இதனால் வீட்டின் அருகே இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதில் 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து ஏர்போடு தீயணைப்பு நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து காளகஸ்தி டி.எஸ்.பி. ராஜய்யா, ரேணிகுண்டா, திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast



    மதுரை வாடிப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் 8 மாத குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #CarAccident
    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி.

    இவருடைய மனைவி லட்சுமி (வயது 45). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயபாண்டி மனைவி வசந்தி (22), முத்தன் மனைவி மரத்தி (60) ஆகியோரும் மதுரை செல்வதற்காக இன்று காலை 10 மணிக்கு பஸ்நிறுத்தம் நோக்கிச் சென்றனர்.

    வசந்தி தனது 8 மாத கைக்குழந்தை ஆத்விக்கை அழைத்து வந்தார். இவர்கள் மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பல்லடம் நோக்கி கார் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக காரின் இடதுபக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது.



    இந்த விபத்தில் லட்சுமி, மரத்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தி, அவரது மகன் ஆத்விக் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந் தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  #CarAccident



    திருப்பூரில் இன்று காரும் சரக்கு ஆட்டோவும் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #TirupurAccident
    குன்னத்தூர்:

    திருப்பூரை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் (33), முனிஸ்வரன் (35), பிரவின் (24), சுப்பு (50). இவர்கள் 4 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்களது நண்பர் ஒருவர் கையில் அடிபட்டு ஈரோடு மாவட்டம் கோபியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க ஜெகநாதன் உள்ளிட்ட 4 பேரும் நேற்று மாலை ஒரு காரில் கோபி சென்றனர்.

    நண்பரை பார்த்து விட்டு அவர்கள் திருப்பூர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை பிரவின் ஓட்டி வந்தார். இந்த கார் குன்னத்தூர் அருகே உள்ள நெட்டிச்சிப்பாளையம் பிரிவு அருகே இரவு 8.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து லோடு ஆட்டோ மீது மோதியது. பின்னர் கட்டுக்குள் வராமல் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் புகுந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் காரில் வந்த ஜெகநாதன், முனிஸ்வரன், பிரவின்,சுப்பு, லோடு ஆட்டோ டிரைவர் தண்ணீர் பந்தல்பாளையம் சின்னசாமி (46), பஸ் நிழற்குடையில் நின்று கொண்டிருந்த பொங்கியண்ணன் (22), இளவரசி (18) ஆகிய 6 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொங்கியண்ணன், இளவரசி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெகநாதன், முனிஸ்வரன், பிரவின், சுப்பு, சின்னசாமி ஆகியோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் ஜெகநாதனும், முனிஸ்வரனும் நேற்று இரவு 10.30 மணிக்கு பரிதாபமாக இறந்தனர். இரவு 11.30 மணிக்கு பிரவினும், இன்று அதிகாலை 3.30 மணிக்கு சுப்புவும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

    பலியான ஜெகநாதன் திருப்பூர் பிச்சம் பாளையத்தையும், சுப்பு பூலுவபட்டியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    படுகாயம் அடைந்த லோடு ஆட்டோ டிரைவர் சின்னசாமி கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

    கோபியில் இருந்து கார் கிளம்பிய போதே தறி கெட்டு ஓடி வந்ததாகவும் கோபி பகுதியில் 2 இடத்தில் விபத்தில் சிக்க இருந்ததாகவும் சக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    எனவே காரில் இருந்தவர்கள் குடி போதையில் இருந்தார்களா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும். விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குன்னத்தூர், திருப்பூர்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TirupurAccident
    கனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #frederictonshooting
    மான்ட்ரியல்:

    கனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட  பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.

    இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  #Canadiantownshooting #frederictonshooting 
    சொத்து தகராறு காரணமாக தம்பி வீட்டுக்கு அண்ணன் வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டவி பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திர தேவ்கடே (30). இவரது தாய் கஸ்தூரிபாய் (60), அவரது சகோதரர் ராகுலுடன் வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவருக்கும் இடையே நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.  

    இந்நிலையில், தனக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராமச்சந்திரன் நேற்று இரவு ராகுல் வீட்டின் மீது கெரசினை ஊற்றி தீ வைத்தார். வீட்டின் உள்ளே படுத்திருந்த ராகுல், அவரது மனைவி சுஷ்மா மற்றும் அவரது மகன் ஆர்யன் (3) மற்றும் அவரது தாய் கஸ்தூரிபாய் ஆகியோர் தீயில் சிக்கினர்.

    தனது உடலில் தீப்பற்றிய போதிலும், வீட்டை விட்டு வெளியே வந்த ராகுல் அங்கு நின்றிருந்த ராமச்சந்திரனை கட்டிப்பிடித்தார்.

    தீயில் சிக்கி அலறிய அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராகுல், அவரது மனைவி, மகன் மற்றும் ராகுலின் தாய் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். ராகுல் வீட்டுக்கு தீ வைத்த ராமச்சந்திரன் படுகாயத்துடன் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சொத்து தகராறு காரணமாக சகோதரர் வீட்டுக்கு வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழைக்கு 4 பேர் பலியானார்கள். நிலச்சரிவில் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்தன. #Mumbairain
    மும்பை:

    மராட்டியத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு மேலும் தீவிரம் அடைந்தது. இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய, விடிய பேய் மழை கொட்டி தீர்த்தது.

    அதன்பின்னரும் மழையின் வேகம் குறையவில்லை. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் நாள் முழுவதும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.



    இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொட்டி தீர்த்த கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மும்பை மக்களின் உயிர் நாடியான மின்சார ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய 3 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.

    கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மழையின் போது, வடலா கிழக்கு பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்கள் உள்பட 15 வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு மண்ணில் புதைந்தன.

    மும்பை மற்றும் தானேயில் பெய்த பலத்த மழைக்கு 4 பேர் பலியானார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 23 செ.மீ. மழையும், கொலபாவில் 10 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதுதவிர விராரில் 18 செ.மீ., வசாயில் 18 செ.மீ., மாணிக்பூரில் 16 செ.மீ., மாண்ட்வியில் 19 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.

    மும்பையில் அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  #Mumbairain  #Tamilnews 
    திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வேன்-மணல் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை அவர்கள் வேனில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர் சிறுமிகள் என 17 பேர் பயணம் செய்தனர். தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஜான் (வயது 24) வேனை ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.

    வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×