search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சீனிவாசலு ரெட்டி, புஜ்ஜியம்மா மற்றும் குழந்தைகள் பவ்யா, நிதின்.
    X
    பலியான சீனிவாசலு ரெட்டி, புஜ்ஜியம்மா மற்றும் குழந்தைகள் பவ்யா, நிதின்.

    திருப்பதி அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி

    திருப்பதி அருகே கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ஏர்பேடு ராஜில கண்டிகா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு ரெட்டி (வயது 30) விவசாயி. இவரது மனைவி புஜ்ஜியம்மா (26). இவர்களுக்கு பவ்யா (6), நிதின் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தன.

    நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு 4 பேரும் வீட்டில் தூங்கினர். கியாஸ் இணைப்பு ஆப் செய்யாமல் இருந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் கியாஸ் பரவியுள்ளது.

    இதனை அறியாத சீனிவாசலு ரெட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மின்விளக்கை போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தார். அப்போது வீடு முழுவதும் பரவியிருந்த கியாஸ்சால் தீப்பற்றியது. வீடு முழுவதும் தீ பரவியது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்ட படி வெளியே வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள். அங்கு ஓடிவந்தனர். தீ எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீயின் அளவு அதிகரித்தது. இதனால் வீட்டின் அருகே இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதில் 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து ஏர்போடு தீயணைப்பு நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து காளகஸ்தி டி.எஸ்.பி. ராஜய்யா, ரேணிகுண்டா, திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GasCylinder #Blast



    Next Story
    ×