search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டெலிவரி மேன் உள்பட 4 பேர் பலி
    X

    கோவையில் டெலிவரி மேன் உள்பட 4 பேர் பலி

    • தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார்.
    • நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை:

    பெங்களூரை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அங்கு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வினோத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் தங்கவேல் (68). ரேடியோ மெக்கானிக். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் அன்னூர் - கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்பேது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது.

    இதில் படுயாகம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் 65 வயது மதிக்க தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரத்தினபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் குட்டி கவுண்டர் வீதி - சின்னத்தம்பி வீதி சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்டு சுவரில் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×