search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
    X

    நிலக்கோட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி

    நிலக்கோட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகாவில் 2 லட்சத்துக்கும் மேல்மக்கள் வசித்து வருகிறார்கள். சுமார் 85 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ரேசன் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ஒருசில பேருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்க வில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் இ-சேவை மையத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

    இ-சேவை மையத்திற்கு வந்தால் கடந்த 1½ மாதங்களாக இதுபோன்ற கார்டுகள் வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்குகிறது. இந்த சமயத்தில் முதல் பட்டதாரி, பிறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு தேவைப்படுகிறது.

    தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள மக்கள் எந்த வித அரசு உதவியும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    Next Story
    ×