search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student murder"

    • கார், சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவன் கட்டக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 30-ந்தேதி ஆதிசேகர், அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆதிசேகரின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகன் விபத்தில் சாகவில்லை. அவனது சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் ஆதிசேகர் சென்ற சைக்கிள் மீது கார் மோதும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த கார், வேண்டும் என்றே மோதுவது போல் இருந்தது.

    இதனால் போலீசார், கார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஆதிசேகர் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    சிறுவனின் உறவினரான பூவாசலை சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் தான் இந்த கொலை செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியரஞ்சன், கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாகவும் கோவில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும் அதனை பார்த்த சிறுவன் ஆதிசேகர் மற்றவர்களிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிரியரஞ்சனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
    • கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் இறந்து போன இளம்பெண் யார்? அவரை கொலை செய்து புதைத்த மர்மகும்பல் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். குறிப்பாக 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

    கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. இதில் அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், அந்த பெண்ணிற்கு 17 முதல் 19 வயதிற்குள் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. அவரை கொன்று புதைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில். பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அகிலன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

    இவர்கள் இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்த போது பிரியதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரியதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்றுள்ளது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமானடி, சித்தேரிப்பட்டு கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
    • யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலான் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோஷினி அஹிர்வர் (வயது 21) என்ற அந்த மாணவி, தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் வந்த 2 நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாணவி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், 'அரசு சார்பு ஊடகத்தினரும், பாஜகவும் இந்த மரணத்தை கொண்டாடுவார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளது.

    • மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார். நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். சில மாணவர்கள்  சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவனை, ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மவுலீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் பள்ளி முன்புள்ள திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு 3 மாணவர்களையும் இன்று கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 

    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

    • காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் விசாரணை.
    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
    • மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்காலில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்ப படித்து வந்தார். படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.

    இதில் மயங்கி விழுந்த பால மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் சகாய மேரி விக்டோரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எலி மருந்து ஏேதனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). காரைக்காலில் உள்ள ரேசன்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலைநிகழ்ச்சியில் ஆர்வம் உள்ள துடிப்பானவராகவும் இருந்தார்.

    தற்போது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் கலந்து கொண்டுவிட்டு மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன் எனக்கு பள்ளியில் குளிர்பானம் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே பாலமணிகண்டன் வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த தாய் மாலதி கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மாணவன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் இன்று காலை இறந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

    அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பாலமணிகண்டனுடன் வகுப்பில் மாணவி அருள்மேரி என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் பாலமணிகண்டனுக்கும் இடையே படிப்பில் கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த விபரத்தை அருள்மேரி தனது தாய் சகாயமேரி விக்டோரியாவிடம் தெரிவித்தார். இவர் காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் வசித்து வருகிறார்.

    மகள் தன்னிடம் தெரிவித்ததை சகாயமேரி விக்டோரியா ஆத்திரம் அடைந்தார். எனவே மாணவன் பாலமணிகண்டனை பழி தீர்க்க திட்டம்போட்டார். அதன்படி குளிர்பானத்தில் விஷம் கலந்து சகாயமேரி விக்டோரியா கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கும் பள்ளிக்கு சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி தேவதாஸ் என்பவரிடம் மாணவன் பாலமணிகண்டனின் அவனது பெற்றோர் கொடுத்ததாக கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார்.

    இந்த விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவன் பாலமணிகண்டன் குடித்ததால் இறந்துள்ளார். மேற்கண்டவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிந்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

    கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசபடுத்தினர்.

    படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடி அருகே பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரை சேர்ந்த ஜெய்சங்கர் நாயுடு மகன் தருண் குமார் (வயது 20) காட்பாடி அடுத்த சின்னலத்தேரியில் உள்ள அவரது தாய் மாமா ரமேஷ் (வயது 45 ) என்பவர் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷின் மகள் வேறு யாருடனோ போனில் பேசுவதாக தருண்குமார் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தருண்குமாரை தாக்கினார். இதுபற்றி அவர் பெங்களூரில் உள்ள அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நேற்று இரவு தருண்குமாரின் தாயார் கிரிஜா லத்தேரிக்கு வந்தார். அப்போது மகனை தாக்கியது குறித்து அவரது அண்ணன் ரமேஷிடம் தட்டிக் கேட்டார்.

    இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தருண்குமாரை தென்னைமட்டையால் தாக்கினர்.

    படுகாயமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தருண் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலை வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது 18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை ஜக்கம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் நாகேந்திரபிரசாத் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலை போலீசார் கைப்பற்றி ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் சென்ற நண்பர்கள் எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. எனவே இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூரை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர், பையனூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் ஒருநாள் மாணவியின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வெளியே சென்று இருந்தனர். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அசோக் குமார் (24) என்ற வாலிபர் திடீரென மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னரும் வெறி அடங்காத அந்த காமக்கொடூரன், ஈவு இரக்கமின்றி மாணவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த மாணவியின் குடும்பத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்ததைப்பார்த்து, அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்ட அவர்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு அருகே அசோக் குமாரின் செருப்பும், அவர் அணிந்திருந்த ஆடையும் கிடந்தது. மேலும் மாணவியின் கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தியும் அங்கிருந்து மீட்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அசோக் குமாரை அதிரடியாக கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மாணவியை கற்பழித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    பின்னர் இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் மாணவியை கொலை செய்த குற்றத்துக்கு அசோக் குமாருக்கு தூக்கு தண்டனையும், கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஸ்ரீசீதா தேவி ஆஜரானார்.

    9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம், செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் சரவணன்.

    சாய்ராம் கல்லூரியில் இவர் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற மாணவர் சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி மறுநாள் அவரது தாய் சங்கரி ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆனால் சரவணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் சரவணனின் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் கல்குவாரியில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது காஞ்சிபுரம் மாவட்ட காயார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் ஆதம்பாக்கத்தில் மாயமான மாணவர் சரவணன் உடல் என்பது தெரிய வந்தது. சரவணனின் தலையில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சரவணனை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று கடத்தி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் பெரிய கல்லை கட்டி உடலை குவாரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரவணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

    சரவணனுக்கு நண்பர்கள் அதிகம். வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் எங்கு சென்றார்? கொலையாளிகளிடம் சிக்கியது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. கடந்த 22-ந்தேதி காணாமல்போன அன்று சரவணன் கடைசியாக யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    காதல் தகராறில் கொலை நடந்ததா? நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது இதுதொடர்பாக சரவணன் படித்துவந்த என்ஜினீயரிங் கல்லூரியில் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும்போது, கொலையாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதன்மூலம் கூலிப்படையினர் சரவணனை கடத்திச் சென்று கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சரவணனின் உடலை மீட்ட காயர் போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    மாயமாகி 7 நாட்களுக்கு பின்னர் சரவணன் உடல் மீட்கப்பட்டதால் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. அவரது போட்டோ மற்றும் பெற்றோர் கூறிய அடையாளத்தை வைத்தே சரவணனின் உடல் அடையாளம் காணப்பட்டது.

    ×