என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி கொலை வழக்கு - கொலையாளி கைது
    X

    கல்லூரி மாணவி கொலை வழக்கு - கொலையாளி கைது

    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

    Next Story
    ×