search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் கொடுத்து மாணவன் கொலை: கைதான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை
    X

    விஷம் கொடுத்து மாணவன் கொலை: கைதான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை

    • படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
    • மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்காலில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்ப படித்து வந்தார். படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.

    இதில் மயங்கி விழுந்த பால மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் சகாய மேரி விக்டோரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எலி மருந்து ஏேதனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×