ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மதுரை வீரருக்கு கார் பரிசு

ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மதுரை வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மாடுபிடி வீரர் கண்ணனுக்கான கார் பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மாடுபிடி வீரர் கண்ணனுக்கான கார் பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
Published on

மதுரை

கடந்த 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வீரர் யார்? என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் சிறந்த வீரருக்கான கார் பரிசை, மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

காளைகளை வாடி வாசலில் திறந்து விட்டு, ஒரு வரலாற்றை உருவாக்கி, முதல் முதலாக அந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் பெயரில் கார் பரிசு வழங்குகிற முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த பெருமைக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்கரார் எடப்பாடி பழனிசாமி ஆவார்.

2021-ம் ஆண்டு வழங்குகிற முதல் பரிசு காரை வழங்குவதற்கு, கோர்ட்டில் வழக்கு இருந்த காரணத்தால் தொடர்ந்து பாதுகாத்து வைக்கப்பட்டது. கண்ணன் என்கிற அந்த காளை பிடிவீரர் சிறந்த வீரராக ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மாடுபிடி வீரர் கண்ணனிடம் முதல் பரிசான கார் ஒப்படைக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற வாடிவாசல் என்று சொன்னால் அது அலங்கா நல்லூர் வாடிவாசல் ஆகும். இந்த வாடிவாசலில் களம் காண்கிற அந்த காளைகளுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உண்டு. இந்த வாடிவாசலில் நடைபெறுகிற உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு ஒரு அரங்கத்துக்குள் அடக்கி விடுவார்களோ என்ற அச்சம் இன்றைக்கு இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல அலங்கா நல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிற இடம் வனப்பகுதி ஒட்டி அரசு இடமாக அது இருக்கிறது. ஒரு கால்நடை பண்ணை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 66 ஏக்கரில் உள்ள அந்த இடத்தில் குளம் இருக்கிறது. நீர்நிலைகளில் எப்படி அமைக்க முடியும்? அதுபோல அரசு வேலைவாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்க நிர்ணயம் செய்யப்படும், முழுமையாக செயல்படுத்தும் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகளும், அரசு வேலையும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பல வாக்குறுதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமைச்சராகி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிஇளைஞர்களை ஏமாற்றாமல் ஏதாவது அறிவிப்பு கொடுப்பாரா? அப்படி கொடுத்தால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com