search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two"

    • ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.

    • ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×