search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rat poison"

    • அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
    • தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.

    மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா்.

    காங்கயம்:

    காங்கயம் ஆவங்காளிபாளையம் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 55). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவருக்கு கடந்த பல வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

    இந்நிலையில் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா். இதையறிந்த அவரது குடும்பத்தினா் பழனிசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 

    • மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
    • 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கடன் பிரச்சினையில் மளிகை கடை ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் பாண்டியன் நகர் விரிவாக்கத்தை அடுத்த சிவவேலன் நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன் (வயது47). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தனர்.

    இதற்கிடையே சித்தார்த்தன் கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதுபற்றி அவர் அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு ராஜலட்சுமி ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக கடனை எப்படி அடைப்பேன் என்று தெரியவில்லை. மகனை நன்றாக பார்த்துக்கொள் என்று தொடர்ந்து மனைவியிடம் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மளிகை கடைக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் பகல் 2 மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று கூறி சித்தார்த்தன் மளிகை கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

     சித்தார்த்தனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை ராஜலட்சுமி வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார், அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மருந்து-மாத்திரை கொடுத்து அனுப்பினர்.

    ஆனால் வீட்டுக்கு வந்த போது சித்தார்த்தனுக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து ராஜலட்சுமி உறவினர்கள் உதவியுடன் கணவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சித்தார்த்தனிடம் டாக்டர்கள் விசாரித்த போது எலி மருந்து தின்று விட்டுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி சித்தார்த்தன் பரிதாபாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.
    • இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.

    3 வயது குழந்தை

    இவரது மனைவி சுகிர்தா. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஷாம் லிரின். இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதற்காக எலி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.

    இதனை பார்த்த ஷாம் லிரின் தின்பண்டம் என நினைத்து அதை எடுத்து தின்றுள்ளார். இதை அவளது பெற்றோர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

    பரிதாப சாவு

    இதனிடையே அவள் திடீரென வாந்தி எடுத்ததை பார்த்த பெற்றோர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென ஷாம் லிரின் மயங்கி விழுந்தாள். உடனே அவளை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார்.
    • இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் நாடார் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (45). இவரது கணவர் சென்னியப்பன் (54). இவர் தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

    மது அருந்தும் பழக்கம் காரணமாக சென்னிய ப்பனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி

    வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே பங்கூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவருடன் இவரது தந்தை சாரங்கபாணி (வயது86). தாய் கோவிந்தம்மாள்(81) ஆகியோர் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே கோவிந்தம்மாள் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனைவி மீது பாசமாக இருந்து வந்த சாரங்கபாணி மனவேதனையில் இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சாரங்கபாணி சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாரங்கபாணி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×