search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arguing"

    • கோவிலுக்கு அருகில் சிகரெட் பிடிக்க கூடாதென சற்குணராஜ் குடும்பத்தார் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.
    • ஈஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சற்குணராஜை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.

    ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.
    • பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீசார், நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.

    போலீசார் அழைத்து வந்த பெண், பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

    இதை–யடுத்து அந்த நகைக் கடைக்கு சென்ற பரமத்தி வேலூர் போலீசார், உரிமை–யாளரிடம் விசாரணை நடத்திட, அவரை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரத்தை சேர்ந்த மற்ற நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள், நகைக்கடை உரிமையாளரை அழைத்து செல்வதற்கு மறுப்பு தெரிவித்து, பரமத்தி வேலூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ராசிபுரம் போலீசாரின் அனுமதி இல்லாமல், எப்படி நீங்கள் விசாரணை நடத்தலாம்? என பரமத்திவேலூர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, திடீரென்று கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ராசிபுரம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நகைக்கடை உரிமையா–ளர்கள் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி.யிடம் விளக்கம் அளித்தனர்.

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் எனது கணவரை போலீசார் கைது செய்ததால் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் லாஸ்பேட்டை காந்தி நகர் டேனியல் சுந்தர்சிங் இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டேனியல் சுந்தர்சிங் மனைவிஆனந்தி உருளையன் பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது கணவர் அப்பாவி, அவரை விடுவிக்க வேண்டும், இல்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன் என்று கூறினார்.

    பின்னர் ஆனந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு டேனியல் சுந்தர்சிங் புதுவை கொசக்கடை வீதியில் துணிக் கடை வைத்துள்ளார்.

    எனக்கும், அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது. துணிக்கடையில் கிடைக்கும் வருமானமே போதுமானது.

    கடந்த 2014-ம் ஆண்டு சந்துருஜி எனது கணவருடன் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு பொருட்கள் வாங்க ஸ்வைப்பிங் மி‌ஷன் தேவைப்படுகிறது. அதற்கான கமி‌ஷன் தொகையை நான் செலுத்தி விடுகிறேன் என்று கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 2 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஸ்வைப்பிங் மிஷினை கேட்டு வந்தனர். அவர்கள் முகவரியை வாங்கி வைத்து விட்டு ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து அனுப்பினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக ரூ.58 லட்சம் வரை ஸ்வைப் பிங் செய்துள்ளனர். இதனால் எனது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனது கணவர் கணக்கில் வந்த ரூ. 58 லட்சத்தையும் சந்துருஜியிடம் கொடுத்து விட்டார்.

    அப்போது அவர்கள் 8 சதவீதம் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார்கள். அதை அவர் ஏற்கவில்லை. நீங்கள சட்ட விரோதமாக ஏதோ செய்கிறீர்கள். அதனால் எனது ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு சந்துருஜியும்,அவரது ஆட்களும் எனது கணவரை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர்.

    சில நாட்கள் கழித்து ஸ்வைப்பிங் மிஷின் கொரியரில் எங்கள் வீட்டுக்கு வந்தது. அதனை எனது கணவர் சம்பந்தப்பட்ட வங்கியில் சரண்டர் செய்துள்ளார். அப்போது உங்கள் ரூ. 58 லட்சம் வரை ஸ்வைப்பிங் செய்யப்பட்டதால் அதற்கான வரி ரூ. 12 லட்சம் செலுத்தி உள்ளோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உங்கள் கணவர் ஏ.டி.எம். பண மோசடியில் சிக்கி உள்ளார். அவரை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்.

    இதையடுத்து நானும், எனது உறவினர்களும் சேர்ந்து நகைகளை அடகு வைத்து ரூ. 95 ஆயிரம் கொடுத்தோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது. ஆனால், இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனது கணவரை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். நாங்கள் கொடுத்த ரூ. 95 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 75 ஆயிரம் மீட்டதாக கூறி இருந்தனர்.

    இது திட்டமிட்ட சதி. ஏடி.எம். மோசடிக்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. முக்கிய குற்றவாளியான சந்துருஜியை கைது செய்யாமல் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவரை கைது செய்து இருக்கிறார்கள்.

    இதனால் எனது கணவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது கணவருடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×