search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe"

    • திருச்சியில் கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவர், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • கள்ளக்காதலன் வெறிச்செயல்

    திருச்சி,

    திருச்சி கிராப்பட்டி மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). இவர் அப்பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரீத்தா வுக்கும் எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த வெங்கட் (33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு அவரது மைத்துனரான, மற்றொரு திருநாவுக்கரசு (வயது 29)ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட் வீட்டுக்கு சென்று அவரிடம் சத்தம் போட்டு உள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த வெங்கட் திடீரென்று அரிவாளை எடுத்து 2 பேரையும் வெட்டினார். இந்த சம்பவத்தில் காயம டைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருநா வுக்கரசு எடமலைப்பட்டிப் புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட்பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

    இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் ஓடிவந்து வெங்கடேச பெருமாளை கண்டித்து உள்ளார். இந்த முன்வி ரோதத்தில் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகே பெட்ரோல் பங்க் அருகே சென்ற அருண்கு மாரை வழிமறித்து ஆபாசமாக பேசிய வெங்கடேச பெருமாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில படுகாய மடைந்த அருண்குமாரை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை வேல்முருகன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.

    • ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால், அண்ணனை அரிவாளால் தம்பி வெட்டியுள்ளார்
    • தோகைமலை போலீசார் தம்பி மீது வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குண்டன் பூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் வெள்ளைச்சாமி (வயது 50). முருகேசன் (45). விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தாய் கைலாசம் இளையமகன் முருகேசன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.தற்சமயம் கைலாசம் வேப்பம்பழங்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை முருகேசனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் குண்டன்பூசாரியூரில் உள்ள முருகேசன் வீட்டில் கைலாசம் இருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி, தனது தாய் கைலாசத்திடம் வேப்பம்பழம் விற்பனை செய்து வைத்து உள்ள பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி நல்லங்காள் ஆகிேயார் வெள்ளைச்சாமியிடம் தாய் கைலாசத்தை பராமரிப்பதும் இல்லை, உணவும் கொடுப்பதில்லை எப்படி பணம் கேட்கலாம் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த முருகேசன், நல்லங்காள் ஆகியோர் சேர்ந்து வெள்ளைச்சாமியை தகாதவார்த்தையால் திட்டி, அரிவாளால் வெட்டினர். இதில் வெள்ளைச்சாமி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முருகேசன், நல்லங்காள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் வெள்ளைச்சாமியின் மனைவி தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி நல்லங்காள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42) என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து நேற்று இரவு லாரியை வீட்டின் முன்பு சாலையில் நிறுத்தி இருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அந்த வழியாக லாரியில் வந்த அருள், கோபாலிடம் லாரியை ஓரமாக நிறுத்தாமல் ஏன் இடையூறாக நிறுத்தி இருக்கிறாயே, நான் எப்படி போவது என கூறி யுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    கைது

    இதையடுத்து கோபாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார்.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது
    • ரவுடி உள்பட தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டர் . இவர் திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த மதன் குமார் என்பவரின் மனைவியிடம் பணம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் வட்டி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் இரண்டு பேருடன் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் முத்துவீரன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டார் . இது குறித்து முத்துவீரன் கொடுத்த புகாரி அடிப்படையில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். இதில் மதன்குமார் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொட்டியத்தில் கடன் தர மறுத்ததால் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • ஏற்கனவே கடன் வாங்கிய நிலையில் மேலும் கடன் தர மறுத்ததால் வெறிச்செயல்

    தொட்டியம், 

    திருச்சி மாவட்டம் தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணிய மகன் முத்தையா (வயது 45). இவர் காட்டுப்புத்தூர் பிரிவு ரோட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேலத்தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் ராஜா (44) என்பவர் முத்தையனிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பித் தரவில்லை. இந்த கடனை பலமுறை முத்தையா ராஜாவிடம் கேட்டு பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில ராஜா, முத்தையாவிடம் மேலும் பணம் கேட்டு உள்ளார். ஆனால் முத்தையா பணம் தர மறுக்கவே, வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா அருவாளால் முத்தையாவை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் முத்தையா தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியும் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரசுராமன் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • வயல் வரப்பு பிரச்சினையில் மாமன்- மைத்துனர் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர்
    • பெரம்பலூர் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நொச்சியம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (வயது 38). நொச்சியம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் 35 இருவரும் மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள். இருவரு க்கும் தங்களது வயல்களில் வரப்பு அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் மாமுண்டி நில அளவையரை வைத்து நிலத்தை அளந்து வரப்பு போட்டார்.இதை அறிந்து ஆத்திரமடைந்த அருள்ராஜ் மாமுண்டி வீட்டுக்குச் சென்று என்னை கேட்காமல் நீ எப்படி வரப்பு போட்டாய் என கேட்டு தகராறு செய்து ள்ளார். பின்னர் சத்தம் போட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அருள்ராஜ் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாமுண்டி வீட்டுக்குச் சென்று அவரது இடது கையில் கொடுவாளால் வெட்டினார். உடனே சுதாக ரித்துக் கொண்ட மாமுண்டி குடி போதையில் இருந்த அருள்ராஜ் கையில் இருந்த கொடு வாழை பிடுங்கி அவரது இரண்டு கணுக்கா ல்களிலும் வெட்டினார்.உறவினர்கள் வெட்டு க்காயம் அடைந்த மாமுண்டி மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து ள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரப்பு பிரச்சனை யில் மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் வெட்டி கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஸ்ரீரங்கத்தில் ஆவின் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார்.ராகவேந்திரா மடம் அருகே இவர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொட்டியம் அருகே மாமனாரை, மருமகள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 72). இவருக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் தர்மராஜ் கடந்த 12- வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.மருமகள் கருப்பாயி (39) மற்றும் தர்மராஜன் இரண்டு மகள்கள் ரகசியா, வர்ஷா ஆகிய மூன்று பேரையும் பூனாட்சி தோட்டம் என்ற இடத்தில் துரைராஜ் குடி வைத்து பராமரித்து வந்தார்.இந்த நிலையில் கருப்பாயிக்கும், துரைராஜ் வீட்டில் பால் கறக்க வரும் வீரமலை என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை துரைராஜ் கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி துரைராஜியை அரிவாளால் வெட்டியுள்ளார். வலி தாங்காமல் துரைராஜ் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயி மீது வழக்கு பதிவு செய்து தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரசுராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற பள்ளி வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • சோமரசம் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சி சோமரசம்பேட்டை பொம்மாணி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 27). இவர் வாசன் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு வாசன் நகர் 7-வது கிராஸ் ரோடு பகுதியில் பள்ளி வேனை வேகமாக இயக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சுந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து வாசன நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வாசன் நகர் நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த சுந்தரை அரிவாளால் விட்டுவிட்டு தப்பி சென்றார். இதில் அவரது இடது கைகளிலும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×