என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரபல ரவுடி வெட்டிக்கொலை
- மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவாளால் முகத்திலேயே சரமாரியாக வெட்டினர்.
- விசாரணையில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்லம்:
தஞ்சாவூர் அருகே வடக்கு வாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 36).
பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன் தீபாவளி பண்டிகைகாக தஞ்சைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து சுவாமிநாதன் தஞ்சை அருகே உள்ள பிருந்தாவனம் ஆர்ச் அருகே வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் சுவாமிநாதனை அரிவா ளால் முகத்திலேயே சரமாரி யாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் இறந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார்வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், சுவாமிநா தனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்ப ட்டுள்ளார். இதற்கு பழிக்குப்பழி வாங்கு வதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்