என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
- கோவில் திருவிழாவில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.
விருதுநகர்
தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது33). இவரது மனைவி ராஜ லட்சுமி(25). விருதுநகர் மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவிக்கும், ராஜலட்சுமி யின் சகோதரர் சதீஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இது தொடர்பான பிரச்சினையில் 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் மணிமாறன் குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கி பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு ராஜலட்சுமி கணவருடன் வந்தார். அங்கு மணிமாறன் சாமியாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவர் ராஜலட்சுமியை பார்த்ததும் ஆவேசமடைந்து திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராஜலட்சுமியின் சகோதரி முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த சுரேசுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனால் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.






