என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் தாக்குதல்"
- அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
- பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது? என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.
இந்த நிலையில், சக மாணவன், ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
- எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.
அதுவும், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
- தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.
மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன்.
- சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.
அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து நின்ற பள்ளி மாணவனை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன். இந்த சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.
அவரை பூங்காவுக்கு வந்தவர்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஒரு பெண், ஸ்பைடர் மேன் உடையில் இருந்த அய்டின் பெடோனை சரமாரியாக தாக்கினார். இதில் மாணவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் மாணவன் முகமூடியை கழற்றுவது போன்று காட்சி உள்ளது. மாணவன் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவனது தாயார் ஷெல்லி பெடோன் தனது பேஸ்புக் பதிவில், எனது மகன் பொழுதுபோக்கிற்காக ஸ்பைடர் மேன் உடை அணிந்து நின்ற நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான் என பதிவிட்டுள்ளார்.
- கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார்.
- தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அந்த மாணவனுக்கும், அதே பள்ளியில் பயிலும் பிளஸ்-1 படிக்கும் கழுகுமலையை சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே பள்ளியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு தனியாக அமர்ந்திருந்த லட்சுமியாபுரம் மாணவரை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த மாணவனை அப்பகுதியினர் மீட்டு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
நாங்குநேரியில் உள்ள பள்ளியில் மாணவர், அவரது தங்கை மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை போல கழுகுமலையில் நடைபெற்று இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
- போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக தெரிகிறது.
இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் உள்ள போர்டில் மதவாசகம் எழுதியுள்ளார். இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால் காயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.
- பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான்.
- 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளான்.
அப்போது அந்த சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவனை 6 பேர் தடுத்து நிறுத்தி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். உடனே அவன் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ஆனாலும் 6 பேர் அவனை விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான். இதனால் 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவனிடம் விசாரித்தனர். பின்னர் மாணவனை தாக்கிய கும்பலை தேடினர். இதுதொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில் 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பள்ளியில் நடந்த பிரச்சினையில் இந்த 6 மாணவர்களும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
அதற்கு காரணம் பிளஸ்-2 மாணவர் தான் என்று ஆத்திரம் அடைந்து 6 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 2 சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும், 4 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
- வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
- போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோவில், மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கு, ஆத்திரத்தில் வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆசிரியரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A mathematics teacher at Madhav Public School in Ahmedabad's eastern region has been suspended after being caught on CCTV physically assaulting a student. Abhishek Patel was seen dragging the student outside while continuing to hit him. #Ahmedabad pic.twitter.com/7Q6qVoOCeg
— Our Ahmedabad (@Ourahmedabad1) October 1, 2024
- பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில் இந்தி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவனுக்கு இந்தி மொழியில் கவிதை சொல்ல தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை மாணவனை பலமுறை தாக்கியுள்ளார். அப்போது மாணவனின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கிய அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து உள்ளார். இதற்கும் ஆசிரியை மாணவனை அடித்துள்ளார்.
இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தி ஆசிரியையை அழைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியை தனது தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் மாணவனின் பெற்றோரோ ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரையில் அவர் பணியில் தொடரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






