என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - தம்பிக்கு வலைவீச்சு
- நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜான்சிராணி வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார்.
- சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜான்சிராணி (வயது 43) வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், இவரது தம்பியான அதே ஊரை சேர்ந்த எட்வர்டு ராஜனுக்கும் பணம் மற்றும் நகை கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜான்சிராணி கீழரதவீதியில் உள்ள தந்தை வீட்டிற்கு தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது எட்வர்டு ராஜன் எங்கள் வீட்டிற்கு எப்படி வரலாம் என கேட்டு ஜான்சிராணியை அவதூறாக பேசினார். மேலும் அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதனால் காயமடைந்த ஜான்சிராணி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எட்வர்டு ராஜனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்