search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cases"

    • ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் கடலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் வேலூரை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பம் அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டிவனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்தப்பட்ட வழக்கில் அபுதாகீரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பரிந்துரையின்படி கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் அபுதாகிர் என்கிற சையது அபுதாகிர் என்பவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபுதாகீரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர்.

    • நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 3,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா், மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், கூடுதல் சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, நீதித் துறை நடுவா்கள் முருகேசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
    • நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 37 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    அதன்படி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 52 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல், 23 வழக்குகள் விசாரணையை முடித்தும், 59 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி, தலைமை காவலர்கள் கந்தசாமி, சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் அழகுமுத்து பாண்டியன், முத்துராஜ், செல்லப்பாண்டி, காவலர்கள் காளிராஜ் மற்றும் முருகேஷ்வரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோடிலிங்கம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இழப்பீடு தொகையாக ரூ.59 லட்சத்து 5 ஆயிரத்து 400-க்கான காசோலைகள், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட 2 அமர்வுகளில், ஒரு அமர்வில் பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் மூர்த்தியும், குற்றவியல் நடுவர் எண்-2 சங்கீதா சேகரும் அமர்ந்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடித்தனர். 2-வது அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன் மற்றும் மூத்த வக்கீல் காமராசு அமர்ந்து வங்கி வாராக்கடன் வழக்குகளை எடுத்து சமரசமாக பேசி முடித்தனர்.

    சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 22 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.59 லட்சத்து 5 ஆயிரத்து 400-க்கான காசோலைகள், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை, வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • 512 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே4 லட்சத்து 11 ஆயிரத்து 910-க்கு தீர்வு காணப்பட்டது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி நடந்த இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை அரியலூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவின்படி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

    தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் நீதித்துறை நடுவர் அறிவு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். மேலும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசன் மற்றும் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர்.

    செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆக்னேஸ் ஜெபகிருபா மற்றும் பாலு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். இதில் 1,238 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், மொத்தம் 512 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே4 லட்சத்து 11 ஆயிரத்து 910-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு வக்கீல்கள், போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை வகித்தார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலையும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமியும் கலந்து கொண்டு விசாரணை நடத்தினர் .

    சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
    • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலையும், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமியும் கலந்து கொண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 5 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீடு தொகையாக ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்திற்கான காசோலைகளை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

    • ஜெயங்கொண்டம் மக்கள் நீதி மன்றத்தில் 138 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • இதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 2 சிவில் வழக்குகளுக்கு ரூ. 5 லட்சத்து, 25 ஆயிரம், 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 17 லட்சத்து, 87 ஆயிரம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் 21 வழக்குகளில் ரூ.8 லட்சத்து 64 ஆயிரமும் தீர்வு காணப்பட்டது. மேலும், இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்க்காக கையகப்படுத்திய வழக்கில், நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்கும் விதத்தில் 113 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான லதா, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி அழகேசன் முன்னின்று நடத்தினர். மேலும் ஜெயங்கொண்டம் நீதித்துறை நடுவர் எண். 1 ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் , அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ், செந்தில்குமார், தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, மற்றும் சுசீலா, மேலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் செய்திருந்தார்.

    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், எஸ்.பி. பரிந்துரை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இதனையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே. எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 க்கும், காசோலை மோசடி வழக்குகள் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வங்கி வராக்கடன் வழக்குகள் ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்து 492 க்கும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 950 க்கும், ஜீவனாம்ச வழக்குகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 360 க்கும் என மொத்தம் 416 வழக்குகள் எடுக்கப்பட்டு 236 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல் சி.பி.ரவிச்சந்திரன், வக்கீல் சங்க செயலாளர் கே.எம்.ராஜேந்திரன்,வக்கீல்கள் பசீர்அகமது,பிரபாகரன் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இந்த நீதிமன்றத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 411 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் இந்த நீதிமன்றத்தில் ரூ 6 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

    இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் போலீசார்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×