search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collections"

    • குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இந்த நீதிமன்றத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 411 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் இந்த நீதிமன்றத்தில் ரூ 6 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

    இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் போலீசார்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
    • ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.

    கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    ×