search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Adalat"

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் திருவள்ளூர், பொன்னேரி தாலுகா சட்ட பணிகள் குழு சார்பில் சிறப்பு மெகா லோக் அதாலத் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர், நீதித்துறை நடுவர் 1 மற்றும் 2 ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் வங்கிக்கடன் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 2 கோடியே 7 லட்சத்து 82ஆயிரத்து 880 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கபட்டது. இதில் பொன்னேரி பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது
    • 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு

    கோவை, 

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    சுமூக தீர்வு காணப்படுவதால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான விஜயா இதனை தொடங்கிவைத்து, மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த சுகன்யா, அவரது குடும்ப த்தினருக்கு இழப்பீ ட்டு தொகையாக ரூ.32 லட்சத்தை வழங்கினார்.

    இதேபோல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர், மதுக்கரை நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 3032 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, முறையீட்டாளர்களுக்கு ரூ.35.39 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், கோவிந்த ராஜ், சுந்தரம், ரவி, சார்பு நீதிபதிகள் நம்பிராஜன், சிவகுமார், மோகனம்பாள், மோகனரம்யா, ஹரிஹரன், உரிமையியல் நீதிபதி தேவராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 16 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் சஞ்சீவி பாஸ்கர், கே.அருணாசலம், சார்பு நீதிபதிகள் கங்காராஜ், மோகனவள்ளி, கவுதமன், வேதகிரி, கலைவாணி, உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 25 அமர்வுகள் மூலம் தாலுகா அளவிலும் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார்.

    சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள், சிவில் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் கோவையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

    இதேபோல், வழக்கு களை மாற்றுமுறையில் தீர்வு காணவும், இலவச சட்ட உதவி பெறவும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • லோக் அதாலத் முகாம்களில் ரூ.3.85 ேகாடி நிவாரணம் கிடைத்தது.
    • இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆணைக்குழு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்ற வியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைவா், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, போக்சோ நீதிபதி சரத்ராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சார்பு நீதிபதி பரமேஸ்வரி சுந்தர ராஜ், குற்றவியல் நீதிதுறை நடுவா்கள் அனிதா கிரிஸ்டி, குற்றவியல் செல்வம், வழக்கறிஞா் ராம்பிரபாகா்் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனா்.

    இதில் 65 குற்றவியல் வழக்குகளும், 131 காசோலை மோசடி வழக்குகளும்இ 88 வங்கிக் கடன் வழக்குகளும், 73 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 49 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 136 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 2 ஆயிரம் மற்ற குற்றவியல் வழக்கு களும் என மொத்தம் 2 ஆயிரத்து 542 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டு 1,878 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டன.இதன் மூலம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 433 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 500 வழக்குகள் பரிசீல னைக்கு எடுக்கப்பட்டு, 74 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டன.

    இதன் மூலம் ரூ.81 லட்சத்து 1,600 வரையில் வங்கிகளுக்கு கிடைத்தது.

    • மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
    • தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

    4,973 வழக்குகள்

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குள், குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் என 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    10 தாலுகா

    நெல்லை மாவட்டத்தில் 10 தாலுகாவில் 27 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் இன்று நடந்து வருகிறது. இன்று 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரை நிலுவையில் உள்ள 5,771 வழக்குகளில் 3,595 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 6 கோடியேரூ. 54 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    இது போன்று நிலுவையில் இல்லாமல் நேரடியாக வந்த 251 வழக்குகளில் 144 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 54 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சந்திரா தொடங்கி வைக்கிறார்.

    நெல்லை:

    மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆலோசனை யின் படி இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவால் நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாக்களில் நடைபெற உள்ளது.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜீத வழக்குகள் காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நாளை காலை 9.45 மணிக்கு நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி யுமான சந்திரா தொடங்கி வைக்கிறார்.

    எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா தெரிவித்துள்ளார்.

    • வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன.
    • விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் மொத்தம் 9 அமர்வுகளுடன் நடைபெற்றது.

    நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

    2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செய லாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திரிவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், வக்கீல்கள் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், மொத்தம் 247 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 65 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது.
    • 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

    தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

    தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.

    • ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார்.
    • சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி சட்டப் பணிகள் ஆணைக்குழுசார்பில், பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நடுவர் நீதிபதி மகேஷ் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 13 வாகன விபத்து வழக்கு, ஒரு சொத்து வழக்கு முடிக்கப்பட்டு ரூ24.40 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை இள நிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    • காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.
    • லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.

    லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதில் காஞ்சிபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இதனை காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.

    • மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது.
    • 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டில் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 315 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரு மான சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    இதில் அரசு மருத்துவர் தினேஷ், வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது 4 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. 4 விபத்துகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மொத்தமாக ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், மூத்த வக்கீல்கள் திருமலையப்பன், மரிய குழந்தை, ராமேஸ்வரன், முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.

    • தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.
    • கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு சமரச தீர்வு மைய விசாரணையை தொடங்கி வைத்தார்.

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலா ளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் , குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசார ணை நடைபெற்றது. தொடர்ந்து தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.

    இதனையடுத்து நீதிபதி சீனிவாசன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 10 இட ங்களில் 25 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 59 வழக்குகள், சிறு வழக்குகள் 1,413 என்பன உள்பட 1498 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 280 சமரச தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×