search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் நடந்த லோக் அதாலத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு
    X

    பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக்அதாலத் நடத்தப்பட்டு உத்தர ஆணை வழங்கப்பட்டது.

    பண்ருட்டியில் நடந்த லோக் அதாலத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு

    • ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார்.
    • சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி சட்டப் பணிகள் ஆணைக்குழுசார்பில், பண்ருட்டி நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சாவித்திரி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நடுவர் நீதிபதி மகேஷ் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 13 வாகன விபத்து வழக்கு, ஒரு சொத்து வழக்கு முடிக்கப்பட்டு ரூ24.40 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை இள நிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

    Next Story
    ×