என் மலர்

    நீங்கள் தேடியது "National People's Court"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

    தேனி:

    நாடு முழுவதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக்அதாலத் நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

    தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ், வக்கீல்கள் காண்டீபன், பாலாஜி, பிரபாகர், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளத்தில் சார்பு நீதிபதி மாரியப்பன்,நீதித்துறை நடுவர் சர்மிளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ராமநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    போடியில் நீதித்துறை நடுவர் வேலுமயில் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் வங்கிகளின் வாரக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
    • வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.

    வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும், நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

    முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்த்து வைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள் மாரியப்பன், சக்திவேல், வெங்கடேஷ், நித்யானந்தம், பழனிக்குமார், வீரபாண்டியன், சிவசுந்தரமூர்த்தி, இந்திரா, பாத்திமா கலிலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனி மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.
    • நேரடியாக வழக்காடிகள் பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குபிரச்சினைகளை சமாதான மாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    தேனி:

    தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி வட்டசட்டபணிகள் குழுவில் வருகிற 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும் .இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், ஜீவனாம்சம்,

    நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன், சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்டவழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    நேரடியாக வழக்காடிகள் பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குபிரச்சினைகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே வருகிற 11-ந்தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அணுகி பயன்அடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 11-ந் தேதி நடக்கிறது.
    • உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    கோவை

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டு தலின்படியும், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய, வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் பிப்ரவரி 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

    எனவே வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

    நிரந்தர மக்கள் நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினராக கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்பட்டது. மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள்,

    சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், ஜீவானாம்சம், நிலஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகளிர் நீதிபதி சரண், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்த விவசாயி பிச்சைமுத்து குடும்பத்திற்கு ரூ.12லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை நீதிபதி சிவகடாட்சம் வழங்கினார். இதேபோல பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டபவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது.
    • பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    தாராபுரம் :

    திருப்பூரில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், குடும்ப நல நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி ஸ்ரீ குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி மற்றும் வழக்கறிஞர்கள் பாலகுமார், பழனிசாமி, ராஜேந்திரன், பாலாஜி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதிகள் நீதிபதி தர்மபிரபு மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே. எஸ். பாபு , முனிசிப் மதிவதனி, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட தென்தாரை பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 24) என்பவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.
    • நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.

    இதில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×