search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில், 10-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    நாமக்கல்லில், 10-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

    • தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியு மான குணசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.

    இந்த மக்கள் நீதிமன்றத் தில், சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள், ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு களில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வியல் வழக்குகள், காசோலை, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரசினைகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறை யீடு கிடையாது. மேலும், இம்மன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம், முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்கள், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை அனுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×