search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது

    • தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.
    • நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றநிகழ்ச்சி நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது.

    இதில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கொண்ட 20 அமர்வில் 7726 வழக்குகள் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×