search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Escaping"

    • ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதா ரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47).

    இவர் மீது ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சிலிண்டர் திருட்டு வழக்கில் செல்லத்துரையை கைது செய்ய கோடியக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். இருந்தாலும் போலீசார் அவரை பிடித்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார் (24) ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோரை குத்தினர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தாக்கி விட்டு வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். செல்லத்துரையை சக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீசா ர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும், இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை பார்த்தார்.

    மேலும் தப்பி ஓடிய வீரக்குமாரை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×