search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk member killed"

    வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (வயது 45). இவருக்கு பூங்கொடி, லெட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சவடமுத்து தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வேன், லாரிகள் வைத்து ஓட்டி வந்தார். கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சவடமுத்துவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வந்தனர். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. ஏனெனில் சவடமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மாயமாகி இருந்தது.

    அதன் பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அந்த நகையை அவர் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே இந்த கொலை வேறு காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீர்மானித்தனர்.

    சவடமுத்துவுக்கு வேறு பெண்கள் யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போனில் அதிக முறை யாரிடம் பேசினார்? கொலை செய்யப்பட்டதற்கு முன்பாக அவருக்கு ஏதேனும் அழைப்புகள் வந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் எவ்வித தடயமும் சிக்க வில்லை. இதனால் கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×