என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பிரமுகர் கொலை"

    • ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
    • ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.

    ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.

    இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட். தி.மு.க.வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். மேலும் ஏ.டி.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை மொத்தமாக எடுக்கும் தொழிலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஆல்பர்ட், சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்பர்ட்டை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ,மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார்,ஆகிய 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.ப. நிர்வாகி சுரேஷ், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில் தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணியை செந்தில்குமார் மேற்கொண்டு வந்தார். இங்கு மண் கொட்டி நிரப்பும் பணியினை ஆல்பர்ட் செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு உள்ளார். இதனால் அதே மண் நிரப்பும் பணியினை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுக்கபட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆல்பர்டிற்கும் சுரேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சுரேசும், செந்தில்குமாரும் தாம்பரத்தில் உள்ள கூலிப்படையினைரை ஏவி ஆல்பர்ட்டை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதையடுத்து பா.ம.க. பிரமுகர் சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர்,ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த்க், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2 வாரம் ஆகியும் தலை கிடைக்காத பட்சத்தில் உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா என்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    வடசென்னையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சக்கரபாணி. மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தார். திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க. பகுதி பிரதிநிதியாக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

    கடந்த 10-ந்தேதி சக்கரபாணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் நாகேந்திரன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அது ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவை காட்டியது. போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போது கழிவறைக்குள் சக்கரபாணியின் உடல் இருந்தது.

    அந்த வீட்டில் வசித்து வந்த தமீம்பானுவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய போது சக்கரபாணிக்கும், தமீம்பானுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    கடந்த 10-ந்தேதி தமீம்பானுவுடன் சக்கரபாணி உல்லாசம் அனுபவித்தார். அப்போது மேல் வீட்டில் வசித்து வந்த தமீம்பானுவின் சகோதரர் வாசிம் பாஷா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது சக்கரபாணி தன்னை மிரட்டி உறவு கொள்வதாக தமீம்பானு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாசிம் பாஷா கத்தியால் சக்கரபாணியை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.

    இதையடுத்து இருவரும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினார்கள். அதே தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்பவரின் உதவியுடன் சக்கர பாணியின் தலையை வாசிம் பாஷா அடையாறு திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் வீசினர்.

    வயிறு மற்றும் குடல் பகுதிகளை காசிமேடு கடலில் வீசினார்கள். மீதமுள்ள பகுதிகளை வெளியே எடுத்துச்சென்று போடுவதற்குள் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து தமீம்பானு, வாசிம் பாஷா, டில்லி பாபு ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அடையாறு ஆற்றில் பைபர் படகு மூலம் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தேடியும் சக்கரபாணியின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து தேடி வந்தனர். மீனவர்களின் உதவியுடன் தேடிப்பார்த்தாலும் தலை கிடைக்கவில்லை.

    சக்கரபாணியின் உடல் பாகங்கள் மட்டும் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது. அதனை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வர 2 வாரங்கள் ஆகும். தலை கிடைக்காத பட்சத்தில் உடல் பாகங்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா என்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    திமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அக்காள் மற்றும் தம்பி உள்பட 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி(65) கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி தமிம்பானு என்பவர் வீட்டில் இருந்தது. சக்கரபாணியின் தலை மற்றும் குடல் பகுதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    தலை இன்னும் சிக்காததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரும் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவில்லை. மீட்கப்பட்டது சக்கரபாணின் உடல் என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது டி.என்.ஏ. சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மீனவர்கள் மற்றும் தீயணைப்பு படை உதவியுடன் அடையாறு ஆற்றில் சக்கரபாணியின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். குடல் பகுதியை காசிமேடு பைபர் படகு அருகில் உள்ள கடல் பரப்பில் தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த கொலை வழக்கில் தமீம்பானு அவரது தம்பி வாஷிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லிபாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 16 வது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ராயபுரம் போலீசார் மனு செய்திருந்தனர். அவர்களை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து ராயபுரம் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் தமீம்பானு, அவரது தம்பி வாஷிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லி பாபு ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்து வருகிறார். எனவே இந்த வழக்கில் மேலும் கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
    • ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார்.
    • அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர். அவரது மனைவி சரஸ்வதி. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்.

    தினசரி அதிகாலை நேரத்தில் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு வருவதுண்டு. அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரும்பை மகாலீசுவரர் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர்.

    அந்த கும்பல் கையில் கத்தி மற்றும் அரிவாள் வைத்திருந்தனர். அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏரிகரைக்கு ஓடினார்.

    உஷாரான அந்த கும்பல் ஜெயக்குமாரை விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார். இந்த செய்தி கோட்டக்கரை கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. சிறிது நேரத்தில் கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோப்பநாய் சிருஷ்டி வரவழைக்கப்பட்டது. அது மகாலீசுவரர் கோவிலை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அந்த பகுதியில் செல்வாக்கானவர். இதனால் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் எதற்காக கொலை செய்தனர். அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×