search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொத்து பிரச்சினை மகனுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    X

    சொத்து பிரச்சினை மகனுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×