என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வாகன சோதனை"

    • நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்திற்கு மதுகடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மது பானங்களை கடத்தி சென்ற காரைக்காலை சேர்ந்த சரவணன் (37), நாகை அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த தாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராய கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,, சாராய வியாபாரிகளுக்கு மது விற்பனையில்ஈடுபடும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவொற்றியூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மூட்டைகளை ஏற்றிவந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

    இந்த ஆட்டோவை கொடுங்கையூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தண்டையார்பேட்டையை சேர்ந்த முருகன் வீட்டில் இருந்து குட்கா மூட்டைகளை ஏற்றி வந்ததாக கூறினார்.

    முருகனிடம் விசாரித்த போது வெளி மாநிலங்களில் இருந்து குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகளை வரவழைத்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. ஆட்டோவில் ஏற்றி வந்த குட்கா, புகையிலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

    ஆட்டோ டிரைவர் விஜயகுமார், குட்கா வியாபாரி முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    லால்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் கடத்தி செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம்லால் குடியில் நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் லால்குடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 22 பெட்டிகள் மது பாட்டில்கள் இருந்தது. உடனே இது குறித்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (25) , வேன் டிரைவர் தஞ்சாவூரைசேர்ந்த அருள் ஆராக்கியதாஸ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் லால்குடி பூவானுரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி அதை தஞ்சாவூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. 

    உடனே போலீசார் 22 மதுபாட்டில்கள் பெட்டிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ 1 லட்சத்து 5 ஆயிரமாகும். 

    கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் அவர்கள் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.

    உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குறிஞ்சிப்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 26 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சத்திரம் செல்லும் சாலையில் இன்று மதியம் குறிஞ்சிப்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒன்றன் பின் ஒன்றாக 26 லாரிகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகளை போலீசார் வழி மறித்தனர். இதை பார்த்த லாரி டிரைவர்கள் 14 பேர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மீதி 12 லாரிகளில் வந்த டிரைவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர்கள் நாகை மாவட்டம் வேடங்குடி கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி, அவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்திய 26 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    லாரியை ஓட்டி வந்த காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல் பட்டு பள்ள மேடை சேர்ந்த கன்னியப்பன் (வயது 39), மதுராந்தகத்தை சேர்ந்த ஜெயக்குமார் (36), செந்தில், ஏழுமலை, சக்திவேல் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 14 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரிகள் அனைத்தையும் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மணல் கடத்தி வந்த 26 லாரிகளை ஒரே நேரத்தில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    சீர்காழி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து 450 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட போதிலும் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும் மது கடத்தல் தொடர்ந்து வருகிறது.

    சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் திருவெண்காடு போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர் அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து மோடடார் சைக்கிளில் தனித்தனியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 450 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காரைக்கால் வருச்சிக்குடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 34). விவேக் (22) என்று தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து சாராய பாக்கெட்டுகளை யாருக்காக கடத்தி வந்தனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் கொள்ளையனை கைது செய்தனர்.

    பல்லடம்:

    கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்த விக்னேஷ்வரமூர்த்தி (36) என்பவன் நெகமம் பகுதியில் பழைய பூட்டுகளை சரி செய்யும் வேலை செய்து வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் திருட்டு,கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளான். அவர் மீது நெகமம் போலீஸ் நிலையத்தில் கொலை,நகைப் பறிப்பு, வீட்டில் பூட்டு உடைத்து கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குக்கள் நிலுவையில் உள்ளது. போலீசார் தேடி வந்தனர். 

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவினாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லையில் வாகன திருட்டு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பல்லடம் வடுகபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ்வர மூர்த்தியை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றச் சம்பவங்களில் ஈடு பட்டதை ஒப்புக் கொண்டுள்ளான். அவரிடமிருந்து திருட்டு போன 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். டூ விலர் திருடனை பிடித்த பல்லடம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் ஆகியோரை பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. முத்துசாமி பாராட்டினார்.

    போக்குவரத்து போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் காரர் வெங்கடேஷ் (வயது 33). இவர், ஈ.சி.ஆர். சாலை கொக்கு பார்க் சிக்னலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது சாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சார்லஸ் (44). கொக்கு பார்க் சாலை ஒருவழிப்பாதையில் வந்தார். அவரை வெங்கடேஷ் மறித்து இது ஒரு வழிபாதை, இந்த வழியாக வரக்கூடாது என்று கூறினார்.

    ஆனால், சார்லஸ் அப்படித்தான் வருவேன் என்றார். உடனே வெங்கடேஷ் சாவியை எடுத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் அழைத்து சென்றார்.

    அவர் இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். சார்லஸ் சாவியையும், அபராதத்துக்கான ரசீதையும் வாங்கிக்கொண்டு மறுபடியும் ஒருவழிப்பாதையில் சென்றார்.

    இதை வெங்கடேஷ் தடுத்தார். இதனால் தகாத வார்த்தையால் சார்லஸ் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் வெங்கடேஷ் காலில் சார்லஸ் மோட்டார் சைக்கிளை ஏற்றியதில் அவர் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து வெங்கடேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வடிவழகன் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் வில்லியனூர் போலீசாருக்கு புதுவை கண்ட்ரோல் அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது.

    அதில், ஒதியம்பட்டு ரோடு கணுவாப்பேட்டை பகுதியில் வாலிபர்கள் ஒரு கும்பலாக கூடி இருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக வில்லியனூர் போலீஸ்காரர் புருஷோத்தமன் அப்பகுதிக்கு சென்று வாலிபர்களை கலைந்து செல்லும்படி கூறினார்.

    அதில், செங்கதிர் செல்வன் என்பவர் புருஷோத்தமனை தகாத வார்த்தையால் திட்டி சட்டையை கிழித்து விடுவதாக கூறினார்.

    இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் தலைமை காவலர் கோபிநாத் ஆகியோர் ஈக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த லக்காராம் என்பதும், மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது.

    போலீசார் விசாரணை நடத்திய போது திடீரென லக்காராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனை தாக்க முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. லக்காராமுக்கு குட்கா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டிவனம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.

    இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×