search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto gutkha"

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவொற்றியூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மூட்டைகளை ஏற்றிவந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

    இந்த ஆட்டோவை கொடுங்கையூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தண்டையார்பேட்டையை சேர்ந்த முருகன் வீட்டில் இருந்து குட்கா மூட்டைகளை ஏற்றி வந்ததாக கூறினார்.

    முருகனிடம் விசாரித்த போது வெளி மாநிலங்களில் இருந்து குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகளை வரவழைத்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. ஆட்டோவில் ஏற்றி வந்த குட்கா, புகையிலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

    ஆட்டோ டிரைவர் விஜயகுமார், குட்கா வியாபாரி முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    ×