என் மலர்
நீங்கள் தேடியது "father son"
- டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.
- மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.
இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். யஷ்பாலின் மூத்த மகன் ஷேகர் (21) இவர் கடந்த 2½ ஆண்டுகளாக போலீஸ் வேலைக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். மகனின் ஈடுபாட்டை பார்த்து தானும் போலீஸ் வேலைக்கு படித்தால் என்ன என்று, தந்தை யஷ்பாலும் போலீஸ் வேலைக்கு தன்னை தயார் செய்ய தொடங்கினார்.
எஸ்.சி. பிரிவின் கீழ் வயது தளர்வு பெற்று, மேலும் முன்னாள் ராணுவ வீரராக இருந்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான மறு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வில் பங்கேற்கவும் அனுமதி பெற்றார்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு 60 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான தேர்வும் நடந்தது. இந்த தேர்வை தந்தை யஷ்பாலும், மகன் ஷேகரும் எழுதினர். தேர்வு முடிவுகள் தந்தை மகன் இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை தந்தது. தேர்வில் இருவரும் வெற்றி பெற்றனர். இது அந்த கிராமத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பணி ஆணையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமிருந்து இருவரும் பெற்றனர்.
இதுகுறித்து தந்தை யஷ்பால் கூறியதாவது:-
கடந்த 2½ ஆண்டாக என் மகனுடன் சேர்ந்து போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தேன். டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.
அன்றாடம் நூலகத்திற்கு நானும் மகனும் சேர்ந்தே சென்று எங்களை தயார் படுத்தினோம். ஆனால் நாங்கள் தந்தை மகன் என்று யாருக்கும் தெரியாது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக போலீஸ் சூப்பிரண்டு ஞானஜெய் சிங்கிடம் வாழ்த்து பெற சென்ற போது அவரிடம் உண்மையை சொன்னேன்.
தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது எல்லோருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என அவர் எங்களை ஊக்குவித்தார். நானும் மகனும் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க வேல்.இவரது மனைவி பாக்கியம் (வயது54). இதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவர் மகன் பிள்ளையார் சித்தன் (27). இவர் பாக்கியம் வீடு அமைந்துள்ள சந்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
இதனால் விபத்து ஏற்படும் என்று பாக்கியம் அவரை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பிள்ளையார் சித்தன், தனது தந்தை ராமரிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் ஆகியோர் பாக்கியத்துடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.
அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பெண்களும் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா பெண்களை தாக்கிய ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் பணம் நிரப்பிய பாண்டியன் நகர் மற்றும் ராமமூர்த்தி ரோடு பகுதி ஏ.டி.எம். மையங்களை ஆடிட்டர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது 2 மையங்களிலும் சேர்த்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, பணம் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்தி கண்ணன் (வயது 28) தான் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே பணத்தை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்ட சக்திகண்ணன் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டாமல் இழுத்தடித்தார்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கிருஷ்ண நாராயணன், விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் மோசடி விவகாரத்தில் சக்தி கண்ணனின் தந்தை ஆண்டவர் (53) சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அதன் பேரில் தந்தை- மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.






