என் மலர்
இந்தியா

நீட் தேர்வுக்கு வருகிறது 'பயோ மெட்ரிக்' சோதனை- முறைகேட்டை தடுக்க புது முயற்சி
- இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு அதிகாரி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு, மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளும், எழுத்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளில் அடிக்கடி முறைகேடுகள் நடைபெறுகின்றன. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன.
ஆள்மாறாட்ட முறைகேடுகளை களைய 'பயோ மெட்ரிக்' சோதனை முறையை தேர்வு மையங்களில் அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததால், வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.






