என் மலர்
நீங்கள் தேடியது "CBSE Exam"
- ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இம்மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
புதுடெல்லி:
அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். மதிய உணவு இடைவேளையில் நண்பர்களுடன் உட்கார்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
விஷ்ணுவும் அவனது நண்பர்களும் சாப்பிடும் போதுதான் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசித் தெரிந்து கொள்வார்கள்.
விஷ்ணுவின் நெருங்கிய நண்பனான பத்ரி ஓரளவு நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே எந்த சந்தேகம் என்றாலும் விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் பத்ரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். பத்ரியும், தனக்கு தெரியவில்லை என்றாலும் அது பற்றி விசாரித்து சொல்லி விடுவான்.
அன்றும் அப்படிதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, என்னடா பத்ரி புதிய தேசிய கல்விக் கொள்கைனு ஒண்ணு கொண்டு வராங்களாமே, என்னடா அது? என கேட்டான்.
அதுவா, ஏற்கனவே உள்ளதுதாண்டா, அத இன்னும் கொஞ்சம் விளக்கமா இருக்கும். அதாவது, நாம் படிக்கிற படிப்பு வெரும் தியரியா இல்லாம, பிராக்டிக்கலாவும் நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும். நம்ம படிப்பு சார்ந்த வேலையும் உடனே கிடைக்கும் அல்லது நாமே பிசினசும் தொடங்க முடியும். இதுக்குதான் மத்திய அரசு தற்போதைய பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டு வந்துருக்கு என்றான் பத்ரி.
ஆமா, நான் கூட கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் எல்லாம் மாற்றம் செய்யப் போறாங்களாமே அப்படியா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டான் விஷ்ணு.
அது கரெக்ட் தான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை இரு முறை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றான் பத்ரி.
அப்படியா, அதுபத்தி சொல்லு கேட்போம் என்றான் விஷ்ணு.
பொதுத் தேர்வை இரு முறை எழுதுவது தொடர்பாக பத்ரி கூறியதன் சாராம்சம் இதுதான்:

மத்திய கல்வி மந்திரி தலைமையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.
இந்நிலையில், பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால் மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் எழுதிக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.

பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் 10-ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9,10-ம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களையும் இரு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை அவர்கள் பராமரித்திருக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது என்றான் பத்ரி.
பரவாயில்லையே, இப்படி இரு தடவை வாய்ப்பு கிடைச்சா நாம் முதல் கட்ட தேர்வில் மார்க் குறைஞ்சாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதிக்கலாம் இல்லையா என்ற விஷ்ணு, ஆனா மறுபடியும் முதல்ல இருந்தே படிக்கணும் இல்ல, அதான் யோசனையா இருக்கு என்றான் விஷணு.
யாருக்கு தேவையோ அவர்கள் 2வது முறை பொதுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது நல்ல ஐடியாதான் எனக்கூறிய படியே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.
- இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள்.
- தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னை:
நாடுமுழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
கடந்த 20-ந்தேதி பிரெஞ்சு பாடத்திட்டத்திற்கான தேர்வு நடந்தது. இன்று முதல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு தொடங்கி நடை பெறுகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு எழுதினர்.
இன்று ஒரேநாளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு தொடங்கி உள்ளது. 10-ம் வகுப்பிற்கு தமிழ் தேர்வும், 12-ம் வகுப்பிற்கு ஆங்கில தேர்வும் நடந்தன. 2 பொதுத்தேர்வுகளும் மாறி மாறி நடக்கின்றன.
27-ந்தேதி 10-ம் வகுப்பு ஆங்கிலம், மார்ச் 4-ந்தேதி அறிவியல், மார்ச் 15-ந்தேதி சமூக அறிவியல், 17-ந்தேதி இந்தி, 21-ந்தேதி கணிதம் ஸ்டாண்டர்டு, கணிதம் பேசிக் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. 10-ம் வகுப்பிற்கு மார்ச் 21-ந் தேதியுடன் தேர்வு முடிகி றது. மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
28-ந்தேதி வேதியியல், மார்ச் 6-ந்தேதி கணிதம், 13-ந்தேதி உடற்கல்வியியல், 16-ந்தேதி உயிரியியல், 17-ந்தேதி பொருளாதாரம், 23-ந்தேதி கம்ப்யூட்டர், அறிவியல் மற்றும் இன்பர் மேஷன் பிராக்ட்டிஸ், 25-ந்தேதி பிசினஸ் படிப்பு, 31-ந்தேதி கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னையில் டி.ஏ.வி., எவர்வின் வித்யாஸ்ரமம், மகரிஷி, பவன்ஸ், எஸ்.பி. ஓ.ஏ., விவேகானந்தா உள்ளிட்ட பல்வேறு சி.பி. எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர்.
- மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பில் 93.12சதவீதமும், 12-ம் வகுப்பு 87.33 சதவீதமும் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மண்டல அளவிலான தேர்ச்சியில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சென்னை 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
12-ம் வகுப்பு தேர்வை 16,728 பள்ளிகளில் படித்த 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேர் எழுதினர். அவர்களில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி வீதம் 87.33 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சியில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வை 24,480 பள்ளிகளில் படித்த 21 லட்சத்து 65 ஆயிரத்து 805 மாணவ-மாணவிகள் எழுதினர்.
அதில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.12சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.28 சதவீதம் குறைந்துள்ளது.
சி.பி.எஸ்.இ. தேர்வில் கணித தேர்வுதாள் கடினமாகவும், ஆங்கில தேர்வு விரிவானதாகவும் இருந்ததால் மாணவர்களால் வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதனால் அவர்களால் சரியான விடை அளிக்க முடியாமல் மார்க் குறைந்துள்ளது.
நேரடியாக வினாத்தாள் கேள்விகள் கேட்கப்படாமல் தந்திரமாக, மறைமுகமான கேள்விகள் ஏராளமாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான சென்டமே எடுத்துள்ளன.
கணிதம் மதிப்பெண்கள் சரிவினால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் கட்ஆப் மார்க் 195-க்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கணித பாடம் கஷ்டமாக இருந்ததால் மாணவர்கள் சுமார் 10 சதவீதம் அளவுக்கு குறைவான மார்க் பெற்றுள்ளனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் இந்த 2 பாடங்களிலும் மாணவர்கள் குறைவான மார்க் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதுசம்பந்தமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்:-
இந்த ஆண்டு கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் அதிக சிந்தனை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பாடத்தில் மாணவர்களின் மார்க் சதவீதம் குறைந்துள்ளது.
வணிகம் உள்பட பிற துறைகளை சார்ந்த மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார்.
- சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
- நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.
கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.
உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மண்டல வாரியாக, 99.75 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.60 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 99.30 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 99.26 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் முதல் 4 இடங்களை தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி ( 77.94%) , உத்தரபிரதேசத்தில் நொய்டா (90.46%) மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது.






