search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual"

    • திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் வருகிற 6-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு திருப்பூா் கம்பன் கழகத்தலைவா்- ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் வரவேற்புரையாற்றுகிறாா். இதைத்தொடா்ந்து, கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தலைமையில் கம்பன் காவியத்தில் கற்போா் நெஞ்சைப் பெரிதும் நெகிழச் செய்பவர் அயோத்தி பரதனே, கிஷ்கிந்தை வாலியே, இலங்கை கும்பகா்ணனே என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.

    இதில், 'அயோத்தி பரதனே' என்ற தலைப்பில் சென்னை கோ.சரவணன், ஈரோடு வளா்மதி ஆகியோரும், 'கிஷ்கிந்தை வாலியே' என்ற தலைப்பில் திருச்சி விஜயசுந்தரி, ராஜபாளையம் உமாசங்கா் ஆகியோரும், 'இலங்கை கும்பகா்ணனே' என்ற தலைப்பில் பெருந்துறை ரவிகுமாா், திருப்பூா் பட்டயக்கணக்காளா் ஜெய்வநாயகி ஆகியோரும் பேசுகின்றனா்.

    மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான போட்டிகள், கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.

    முடிவில் கம்பன் கழக துணைச் செயலாளா் கெளசல்யா வேலுசாமி நன்றி கூறுகிறார். 

    • எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    இதில் எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    எக்ஸல் பொறி யியல் கல்லூரி முதல்வர் பொம்ம ண்ண ராஜா, எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கி டெக்சர் ரூபிளானிங் முதல்வர் பாலமுருகன், எக்ஸல் கல்வியியல் கல்லூரி முதல்வர் சைமன் அருண் பாரத்குமார் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கலை மகள் ஆகியோர் ஆண்ட றிக்கை வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சவுகட்டசென் பேசும் போது, மாணவர்கள் கல்லூரி படிப்பினை வெற்றி கரமாக முடித்து வேலை வாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள வழங்கினார்.

    தெடர்ந்து நடிகர் சதிஷ் பேசும் போது சகஜமாகவும், யதார்த்தமாகவும் மாணவர்களுக்கு நற்பண்புகள், நற்கருத்துக்களையும், வாழ்வில் வெற்றி பெற சிறந்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் விடா முயற்சி நேர்மறையாக சிந்திக்க வும் கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் வரிசையில் முன்னிலை வகித்தவர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கி னர்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸல் பொறியியல் கல்லூரி அட்மினிஸ்ட ரேஷன் இயக்குனர் (பொறுப்பு) அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், கல்வியியல் கல்லூரி, கந்தசாமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எக்ஸல் கல்வி குழும அலுவலர்கள் செய்தி ருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடம் மற்றும் கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

    மாலையில் கடம் புறப்பாடாகி புனித தீர்த்தத்தை கோவில் ஸ்தானிக பட்டர்கள் கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புனித நீர் கொண்டு முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு புனுகு தைலமும், மூலஸ்தானத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு சாம்பிராணித் தைலமும் சாத்தப்பட்டது. இதையடுத்து 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×