search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருடாபிஷேக விழா
    X

    வருடாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    வருடாபிஷேக விழா

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடம் மற்றும் கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

    மாலையில் கடம் புறப்பாடாகி புனித தீர்த்தத்தை கோவில் ஸ்தானிக பட்டர்கள் கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புனித நீர் கொண்டு முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு புனுகு தைலமும், மூலஸ்தானத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு சாம்பிராணித் தைலமும் சாத்தப்பட்டது. இதையடுத்து 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×