என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருடாபிஷேக விழா
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
- 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடம் மற்றும் கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
மாலையில் கடம் புறப்பாடாகி புனித தீர்த்தத்தை கோவில் ஸ்தானிக பட்டர்கள் கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புனித நீர் கொண்டு முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு புனுகு தைலமும், மூலஸ்தானத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு சாம்பிராணித் தைலமும் சாத்தப்பட்டது. இதையடுத்து 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்